விரைவில் முடிவை எட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – அதிரடி திருப்பங்கள்!
விஜய் டிவியின் மெகா ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்க உள்ளது. மேலும், கதையில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வர உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
சில மாதங்களுக்கு முன்னதாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிப்பாதையில் மைல்கல்லை தொட்டது. இதேபோல், இன்னும் பல எபிசோடுகளை இந்த சீரியல் கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும், சீரியல் முடிவதற்குள் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் வர உள்ளது. அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை நடத்துவதில், சிக்கல்கள் வர உள்ளது. அதை மீறி இவர்கள் எப்படி பிரச்சனையை சமாளித்து வெற்றி பெறுகின்றனர் என்பது அடுத்து வரும் கதைக்களமாக இருக்கும். மேலும் குழந்தை பெறுவதற்கு சிகிச்சை எல்லாம் வேண்டாம் என கூறும் முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்ற ட்விஸ்டும் அடுத்து இந்த சீரியலில் வர இருக்கிறது.
Exams Daily Mobile App Download
சமீப காலமாக சின்னத்திரையில் பல முக்கிய தொடர்கள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் முடிய இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.