லட்சுமி அம்மாவின் இறுதி சடங்கில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சகோதரர்கள் – படப்பிடிப்பு புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அது இறந்துபோன லட்சுமி அம்மாவின் இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சின்னத்திரை தொடர்களில் மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தற்போது முக்கியமான கதைக்களத்துடன் பயணித்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னாக வளைகாப்பு, திருமணம் என்று கொண்டாட்டமாக ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது சோகமான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டுள்ளது. அந்த வகையில் கண்ணனின் திருமணம் நடைபெற்ற எபிசோடுகளை தொடர்ந்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சற்று மந்தநிலை காணப்பட்டு வந்தது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முதல் “ரோஜா” சீரியல் வரை – ரசிகர்கள் டாப் கமெண்ட்ஸ்!
இதுவரை ஒன்றாக இருந்து வந்த குடும்பத்தில், தற்போது கண்ணனின் திருமணத்தால் சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் எழ ஆரம்பித்துள்ளது. அதனால் கதையின் ஓட்டத்தில் சற்று அதிருப்தி நிலவி வந்தது. இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் புதிய திருப்பமாக லட்சுமியின் மரணம் அமைந்துள்ளது. அந்த வகையில் லட்சுமியின் திடீர் மறைவால், மூர்த்தி குடும்பம் செய்வதறியாது திகைத்துள்ளது. ஆனால் லட்சுமி மரணமடைந்த விஷயம் கண்ணனுக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தை பிரிந்து 90 நாட்கள், கடுமையாக போராடும் போட்டியாளர்கள் – வெளியான ‘சர்வைவர்’ ப்ரோமோ!
இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் மூர்த்தி, கதிர், ஜீவா ஆகிய 3 சகோதரர்களுடன் ஜனார்த்தனன் இருப்பது போல உள்ளது. குறிப்பாக 3 சகோதரர்களும் வேஷ்டி சட்டை அணிந்துள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது லட்சுமி அம்மாவின் இறுதி சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. என்றாலும் இந்த புகைப்படத்தில் கண்ணன் இடம்பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.