‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் விஜே தீபிகா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வந்த நடிகை விஜே தீபிகா மீண்டும் அந்த சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு அவரே தற்போது பதில் விளக்கம் அளித்துள்ளார்.
சீரியலில் ரீஎன்ட்ரி:
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித கலவையான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது லட்சுமி அம்மா மறைந்து விட்டது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் திருப்பம் காரணமாக இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் எகிறி உள்ளது. லட்சுமி அம்மா மரணத்திற்கு காரணம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டது தான் என்று வீட்டினர் அவர்கள் மீது கோபத்தில் இருந்து வருகின்றனர்.
விஜய் டிவியில் மீண்டும் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
இது ஒரு புறம் இருக்க, கண்ணனுக்கு அவரது அம்மாவின் மறைவு செய்தியினை தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவரது அம்மா முகத்தினை கடைசியில் பார்க்க முடியாத சுழல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கண்ணன் அனைவர் மேலும் கோபமாக இருக்கிறார். தானே சென்று அவரது அம்மாவிற்கு இறுதி காரியங்களையும் செய்கிறார். இதனை மூர்த்தி தடுக்காமல் இருக்கிறார். ஆனால், கண்ணன் மேல் இருக்கும் கோபம் அவருக்கு சற்றும் குறையவில்லை. இதனால் அவரை அனைத்து காரியங்களிலும் ஒதுக்கி வைக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் லட்சுமியின் சினிமா டூ சீரியல் பயணம் – ரக்சாவின் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இப்படியாக இருக்க, இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை மற்றும் விஜே தீபிகா திடீர் என்று சீரியலில் இருந்து விலகினார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார். தொடர்ந்து சீரியலில் லட்சுமி அம்மா இறந்த காட்சிகள் காட்டப்பட்டு வந்த நிலையில், கதையின் போக்கினை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு வந்ததால் கதை களம் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, விஜே தீபிகா மீண்டும் இந்த சீரியலில் நடிக்க வருவார் என்ற செய்திகளும் பரவி வருகிறது. இதற்கு தீபிகா ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.