‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விலகியதும் சோகமாக இருக்கும் கண்ணன் – கலாய்க்கும் ரசிகர்கள்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் மூலமாக பிரபலமான நடிகர் தான் சரவண விக்ரம். தற்போது விஜே தீபிகா அந்த சீரியலை விட்டு விலகியதால் சோகமான பாடலுடன் ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் அனைவரும் தீபிகா சீரியலை விட்டு விலகியதால் தான் இந்த சோகமா என்று கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் சரவண விக்ரம்:
விஜய் தொலைக்காட்சியில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். கண்ணனின் அம்மா அவரை நினைத்து உடல் நலனை கெடுத்து கொள்கிறார். இதனால் அவர் இறந்து போய் விடுகிறார். இப்படி பல விறுவிறுப்பான கட்டங்களுடன் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
சீரியல் நடிகரை மணம் முடிக்கும் சன் டிவி நடிகை – இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் வாழ்த்து!
இந்த நிலையில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா ஜோடிக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. ஆனால், நடிகை தீபிகா இந்த சீரியலில் இருந்து முகப்பரு உள்ளிட்ட சில காரணங்களால் விலகி விட்டார். அவருக்கு பதிலாக தற்போது சாய் காயத்ரி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், சரவண விக்ரம் மற்றும் தீபிகா இருவரது ஜோடி தான் நன்றாக இருக்கிறது என்று ரசிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சுமி அம்மா மரணத்திற்கு கண்ணன் தான் காரணம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் அதிர்ச்சி!
விஜே தீபிகா தான் விலகியதற்கான காரணத்தை இன்னும் சரி வர தெரிவிக்கவில்லை. ஆனால், தான் ஐஸ்வர்யாவாக நடித்த போது அவருக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்து இருந்தார். அதே போல் “இதுவும் கடந்து போகும்” என்ற பாடலை வைத்து ஒரு ரீல்ஸும் செய்து இருந்தார். அவர் விலகியதால் ரசிகர்கள் கவலையாக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர் சரவண விக்ரம் அதே பாடலுடன் சோகமாக ரியாக்ஷன் கொடுத்து ஒரு ரீல்ஸ் செய்துள்ளார். அதனால் ரசிகர்கள் அனைவரும் தீபிகா விலகியதும் தான் இவ்வளவு சோகமா? என்று கலாய்த்து வருகின்றனர்.