‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் நிஜ அம்மாவுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூலமாக பிரபலமடைந்த நடிகர் சரவண விக்ரம் தற்போது தனது நிஜ அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித கலவையான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தான். அண்ணன்-தம்பிகளின் அன்பினை மையமாக வைத்து இயக்கப்பட்டு வரும் இந்த சீரியலில் தற்போது இவர்களது அம்மா மறைந்து விடுகிறார். இதற்கு காரணம் கடைசி மகனாக கண்ணன் ஓடி போய் திருமணம் செய்தது தான் காரணம் என்று தனம் அனைவரின் முன்பும் சண்டையிடுகிறார். ஆனால், கண்ணனோ தனது அம்மாவை பார்க்க விடாமல் செய்ததற்கு இவர்கள் யார் என்று கேட்டு சண்டை போடுகிறார். அத்துடன் தனது அம்மாவிருக்காக தானே அனைத்து சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை செய்கிறார்.
ராஜா ராணி’ நடிகர் சரவணனுக்காக ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள் – பிறந்தநாள் வாழ்த்து!
அவரை தடுக்க அனைவரும் செல்லுகின்றனர், ஆனால் மூர்த்தி அனைவரையும் தடுத்து அவனே செய்யட்டும் என்று கூறுகிறார். இப்படியாக இந்த சீரியலில் பல அழுகை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம் பெற்று வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கான அபிமானம் கூடி கொண்டே வருகிறது. குறிப்பாக, சீரியலுக்காக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவண விக்ரம் சீரியலுக்காக மொட்டை எடுத்து கொண்டார். இதனால் அவரை பலரும் பாராட்டினர்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
இந்நிலையில் முதன் முறையாக தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இனி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் மீது கோபம் இருந்தாலும் தனம் அதனை மறந்து விட்டு அவருக்கு தேவையானதை செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.