கதிர் உயிருக்கு வரும் ஆபத்து.. காப்பாற்ற களமிறங்கிய அண்ணன்கள் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கலக்கல் ப்ரோமோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் முல்லையும் போட்டிக்கு சென்ற இடத்தில் எதிர் டீம்மில் இருப்பவர்கள் அடிக்கடி பிரச்சனைக்கு வருகின்றனர். இந்நிலையில் அவர்களால் கதிர் உயிருக்கு ஆபத்து வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிரும் முல்லையும் சமையல் போட்டிக்காக மதுரைக்கு சென்று இருக்கின்றனர். அங்கே அவர்கள் இருவரும் பல போட்டிகளில் வெற்றி பெற அது பிடிக்காத எதிர் டீம் ஆட்கள் அடிக்கடி கதிரிடம் வம்பிழுக்கின்றனர். ஆனால் போட்டி நடைபெறுவதால் முல்லை கதிரை அமைதியாக இருக்க சொல்லி சமாதானம் செய்கிறார். மேலும் கதிரை அடிக்க அவர்கள் ஆட்கள் தயார் செய்வதாக பேசிக் கொண்டிருக்க அதை முல்லை கேட்டுவிடுகிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால் கதிர் எனக்கும் உனக்கும் எதுவும் ஆகாது என நம்பிக்கை கொடுக்கிறார். மறுபக்கம் முல்லை கதிர் போட்டிக்கு வந்தது பற்றி மூர்த்தி குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கிறது. அதனால் பத்திரப்பதிவு நடைபெறாததால் மூர்த்தி கோவமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், முல்லை கதிர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கதிரை அடிக்க சில அடி ஆட்கள் வருகின்றனர். அவர்களை எல்லாம் கதிர் அடித்து நொறுக்குகிறார்.
விஜய் டிவி சீரியலில் அதிரடியாக மாற்றப்பட்ட முக்கிய நடிகர் – இனி இவருக்கு பதில் இவர்! ரசிகர்கள் ஷாக்!
Follow our Instagram for more Latest Updates
அப்போது முல்லைக்கு என்ன செய்வது என தெரியாமல் ஜீவாவிற்கு போன் செய்து கதிர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். உடனே ஜீவா சென்று மூர்த்தியிடம் விவரத்தை சொல்ல, மூர்த்தி அவர்களை சும்மா விட கூடாது என சொல்லிவிட்டு மதுரைக்கு கிளம்புகின்றனர். அங்கே கதிர் அவர்களை அடித்துவிட, ஆனால் அவர்கள் கதிரை பிடித்துக் கொண்டு கத்தியால் குத்த வருகின்றனர். அதை பார்த்து முல்லை ஷாக் ஆகிறார். ஜீவாவும், மூர்த்தியும் கதிரை காப்பாற்ற வருவார்களா என்பது அடுத்து வரும் எபிசோடில் வர இருக்கிறது.