கண்ணனை ஏற்றுக் கொள்ளும் குடும்பத்தினர், அடுத்த வார “பாண்டியன் ஸ்டோர்ஸ்”எபிசோட் – வெளியான தகவல்!!

0
கண்ணனை ஏற்றுக் கொள்ளும் குடும்பத்தினர், அடுத்த வார
கண்ணனை ஏற்றுக் கொள்ளும் குடும்பத்தினர், அடுத்த வார "பாண்டியன் ஸ்டோர்ஸ்"எபிசோட் - வெளியான தகவல்!!
கண்ணனை ஏற்றுக் கொள்ளும் குடும்பத்தினர், அடுத்த வார “பாண்டியன் ஸ்டோர்ஸ்”எபிசோட் – வெளியான தகவல்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் காசு இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் மூர்த்தி நகை அடகு கடைக்காரர் மூலமாக பணம் உதவி செய்கிறார். இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெற உள்ள எபிசோட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் லட்சுமி அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கின்றனர். அதை நினைத்து தனம் வருத்தப்படுகிறார். ஜீவாவும் கதிரும் அம்மா ஹாஸ்பிடலில் இருந்து கஷ்டப்பட்டு விட்டார் இனிமேல் வீட்டிற்கு வந்து சரியாக இருப்பார் என சொல்கின்றனர். பின்னர் கதிர் தனக்கு கனவு வந்ததாக சொல்கிறார். கனவில் ஒரு ஆண் குழந்தை வந்ததாக சொல்கிறார். கண்ணனுக்கு திருமணம் ஆன போது இப்படி தான் கனவு வந்தது என சொல்கிறார்.

நிச்சயத்திற்கு தயாராகும் பார்வதி, விவாகரத்து பத்திரத்தை பார்த்த சரவணன் – ராஜா ராணி 2 ப்ரோமோ!

அதனால் உங்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என சொல்கிறார். உனக்கு இரட்டை குழந்தை பிறக்க போகிறது என சொல்ல உடனே கதிர் அங்கிருந்து கிளம்புகிறார். கண்ணனும் அவர் நண்பரும் நகையை அடகு வைக்க கடையை தேடி அலைகின்றனர். ஒரு நகை கடைக்காரர், படிக்கிற பசங்ககிட்ட பணம் தர முடியாது என சொல்கின்றனர். யாரு என்று தெரியவில்லை என சொல்லி அங்கிருந்து அனுப்புகின்றனர்.

ஐஸ்வர்யா நகை அடமானம் வைத்துவிட்டியா என கேட்க ஒரு தெரிஞ்சவரிடம் கொடுத்துவிட்டு வந்துருக்கேன். மாலை வந்து வாங்கிக்க சொன்னாரு என சொல்ல ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். நகையை கொடுத்துவிட்டு பணம் வாங்காம வந்திருக்கீங்க என ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் நகைக்கடைக்காரர் மூர்த்திக்கு போன் செய்து உங்க தம்பி கண்ணன் நகை அடமானம் வைக்க வந்தார் என சொல்கிறார். மூர்த்தி மனம் கேட்காமல் போன் செய்து அவனிடம் நகை வாங்காமல் பணம் கொடுங்கள் என சொல்கிறார்.

அஞ்சலிக்கு ஜோடியாக சீமந்தம் செய்யும் பாரதி, கண்ணம்மா – ஹேமா யார் குழந்தை? கேள்வியால் அதிர்ந்த சௌந்தர்யா!

இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் கண்ணன் நகையை வாங்க கிளம்ப நகையை அடமானம் வைக்காமல் காசு கொடுக்கிறார். அதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். நமக்கு யாரு உதவி செய்திருப்பார் என நினைத்து பார்க்க ஒருவேளை அண்ணனாக இருக்குமா என சொல்கிறார். அம்மாவை பார்க்க கூட அனுமதிக்கவர் உங்களுக்கு எப்படி உதவி செய்வார் என ஐஸ்வர்யா சொல்கிறார். ஆனால் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் விட்டு கொடுக்காமல் பேசுகிறார். இப்போது அனைவரும் கண்ணன் மீது பாசமாக தான் இருக்கிறார்கள் என தெரிகிறது. விரைவில் கண்ணனை ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!