ஒற்றுமைக்கு பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமா இது? வெடித்த பூகம்பம் .. முற்றிய குடும்ப சண்டை!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் மற்றும் முல்லை இருவரும் சேர்ந்து சமையல் போட்டிக்கு சென்றிருக்கும் நிலையில், ஒரு புதிய பிரச்னை ஒன்று வெடிக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்ப ஒற்றுமை தான் முக்கியம் என்று ஒரு காலத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து வந்தனர். ஆனால், தற்போது அனைவருமே சண்டையிட்டுக் கொள்வது அடிக்கடி நடந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புது வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி பதிவு செய்ய இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
ஆனால், கதிரும் முல்லையும் எதிர்பாராத விதமாக ஒரு சமையல் போட்டியில் கலந்து கொள்கின்றனர். அதில், அடுத்தடுத்த கட்டங்களில் அவர்கள் இருவரும் ஜெயித்து வருகின்றனர். இதனால் போட்டியை விட்டு இவர்கள் விலக நினைக்கும் போது, அப்படியெல்லாம் விலக முடியாது என்று போட்டி நடத்துபவர்கள் கூறிவிடுகின்றனர். அடுத்த நாள் விடிந்தால் பத்திரப்பதிவு நடக்க வேண்டும்.
சின்னத்திரையில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. காரணம் இதுவா? அவரே சொன்ன விளக்கம்!
Follow our Instagram for more Latest Updates
இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மூர்த்தி, ஜீவா உட்பட அனைவரும் வந்துவிடுகின்றனர். ஆனால் கதிர் மட்டும் கடைசி வரை வர முடியவில்லை. பொறுத்து பார்த்த நிலம் விற்பவர் மூர்த்தியிடம் கோவம் கொள்கிறார். இதனால் மூர்த்திக்கு கதிர் மீது கோவம் வருகிறது. கதிர் கடைசி வரை வர முடியாமல் பத்திரப்பதிவு நின்று விடுகிறது. நிலம் வாங்கும் போது இப்படி அபசகுனமாக நடப்பதாக கதிர் மீது மூர்த்தி சண்டை போடுவது போல் அடுத்து வரும் காட்சிகள் வர உள்ளது.