முதல் போட்டியில் வெற்றி பெற்ற கதிர் & முல்லை, ஐஸ்வர்யாவிடம் வம்பிழுத்த மீனா – இன்றைய எபிசோட்!

0
முதல் போட்டியில் வெற்றி பெற்ற கதிர் & முல்லை, ஐஸ்வர்யாவிடம் வம்பிழுத்த மீனா - இன்றைய எபிசோட்!
முதல் போட்டியில் வெற்றி பெற்ற கதிர் & முல்லை, ஐஸ்வர்யாவிடம் வம்பிழுத்த மீனா - இன்றைய எபிசோட்!
முதல் போட்டியில் வெற்றி பெற்ற கதிர் & முல்லை, ஐஸ்வர்யாவிடம் வம்பிழுத்த மீனா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லை முதல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாய்ப்பை தட்டி செல்கின்றனர். மறுபக்கம் ஐஸ்வர்யா சுவற்றில் ஆணி அடிக்க போக ஆனால் மீனா வேண்டாம் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் அந்த பாட்டியிடம் லோன் காசை வசூலித்து வந்து மேனேஜரிடம் கொடுக்கிறார். அப்போது மேனேஜர் உண்மையாகவே பணத்தை வசூலித்துவிட்டாயா இல்லை உன்னுடைய பணத்தை கொடுத்து சமாளிக்கிறியா என கேட்க, உடனே கண்ணன் அவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் நான் ஏன் வேலைக்கு வர போகிறேன் என கேட்கிறார். பின் கதிரும் முல்லையும் போட்டி நடக்கும் இடத்தில் காத்துக் கொண்டிருக்க, முதல் போட்டிக்கான வழிமுறைகளை சொல்கின்றனர். மேலும் நடுவர்களும் மேடைக்கு வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

கதிர் பயத்தில் முல்லையிடம் ஓடி போயிருவோமா என கேட்க, ஆனால் முல்லை பேசாமல் இருக்க சொல்கிறார். பின் போட்டி குறித்து சொல்கின்றனர். முதல் போட்டியில் டீ போட வேண்டும் என சொல்ல, முல்லை கதிர் தான் நன்றாக டீ போடுவார் என்பதால் அவரை போட சொல்கிறார். முல்லை வாழ்த்துக்களை சொல்ல, கதிர் அருமையாக டீ போடுகிறார். பின் போட்டி முடிந்து ரிசல்ட் வருகிறது. அதில் கதிர் முல்லை முதல் பரிசு வாங்குகின்றனர். அவர்களுக்கு ரூ. 10000 பரிசு கிடைக்கிறது. பின் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்கின்றனர்.

பசி கொடுமையால் தவிக்கும் கோபி, எழிலிடம் காதலை சொன்ன வர்ஷினி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

Exams Daily Mobile App Download

மறுபக்கம் ஐஸ்வர்யா பார்லர் பற்றிய போட்டோ ஒன்றை மாட்ட இடம் பார்க்கிறார். அங்கே அவர் ஆணி அடிக்க செல்ல, ஆனால் மீனா ஆணி அடிக்க விடாமல் செய்கிறார். இங்கே எதற்கு ஆணி அடிக்கிறாய் என கேட்க, அது கனமாக இருக்கிறது அதான் ஆணி அடிக்க போகிறேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் மீனா ஆணி அடித்தால் இந்த வீடு இடிந்துவிடும் என சொல்ல, ஓ நீங்க தான் இந்த வீட்டின் ஓனர் அதனால் இனிமேல் உங்களிடம் கேட்காமல் நான் ஆணி அடிக்கமாட்டேன் என சொல்கிறார். பின் தனம் வந்து என்ன பிரச்சனை என கேட்க, ஐஸ்வர்யா நடந்ததை சொல்கிறார். மறுபக்கம் முல்லை கதிர் இரண்டாம் சுற்று போட்டிக்கு தயாராகுகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!