கண்ணன் & ஐஸ்வர்யா தங்க ஏற்பாடு செய்யும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து ஒளிபரப்பட இருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் சாதாரண கூட்டு குடும்பம் ஒன்றில் ஏற்படும் எதார்த்தமான கதையினை வைத்து காட்சிகள் அமைத்து வருகின்றனர். கூட்டு குடும்பத்தில் சந்தோசம் மட்டுமல்ல சில சண்டைகளும் இருக்கத்தான் செய்யும் என்பதனை அழகாய் எடுத்து காட்டி வருகின்றனர். தற்போது குடும்பத்தில் கடைசியாக இருக்கும் கண்ணன் தனது உறவினர் பெண்ணான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் இரு வீட்டு குடும்பத்தினரும் ஏற்க மறுத்து விடுகின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகையின் வளைகாப்பு கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!
இதனால் இருவரும் நொந்து போய் விடுகின்றனர். இருவரும் காலேஜ் படிப்பதால் எங்கு செல்லுவது, அடுத்து படிப்பிற்கு எப்படி பணம் கட்டுவது என்று மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகின்றனர். கூடுதலாக, இருவரும் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். இதனால் இருவரும் கண்ணன் வீட்டிற்கு செல்லுகின்றனர். ஆனால், குடும்பத்தினர் அனைவரும் இருவர் மீதும் கோபமாக இருப்பதால் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து விடுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இப்படியாக இருக்க, தற்போது அடுத்து நடக்கவிருக்கும் காட்சிகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் பார்த்து இரக்கப்படும் கதிர் அதனை முல்லையிடம் தெரிவிக்கிறார். இதனால் முல்லை தனது அம்மாவின் வீட்டில் இருவரும் தங்கிக்கொள்ள சொல்லலாம் என்று யோசிக்கிறார். தனது அம்மாவிற்கு கால் செய்து இருவரும் தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய சொல்கிறார்.