லட்சுமி அம்மா முகத்தினை கடைசி நேரத்தில் பார்த்து விடும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கண்ணன் கடைசி நிமிடத்தில் தனது அம்மாவை பார்க்க வந்து விடுவார் என்று கூறப்படுகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த வாரம் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் கண்ணனின் அம்மா லட்சுமி மரணம் அடைந்து விடுகிறார். அவரது மரணத்தினை யாராலுமே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும். இது இப்படியாக இருக்க, கண்ணன் வேலை விஷயமாக திருச்சி சென்று விடுகிறார். அவரது போனையும் மறந்து கடையிலேயே வைத்து விட்டு சென்று விடுகிறார்.
அகிலன் பேச்சை மீறி அஞ்சலி செய்யும் காரியம் – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
அதனால் அவரது அம்மா இறப்பு செய்தி குறித்து யாராலும் அவருக்கு தெரிவிக்க முடியவில்லை. கண்ணன் வந்தால் மட்டுமே லட்சுமி அம்மா உடலை எடுக்க வேண்டும் என்று தனம் பிடிவாதமாக கூறுகிறார். கடைசியாக அவரது அம்மா முகத்தினை கண்ணன் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உடனடியாக உடலை எடுக்க வற்புறுத்துகின்றனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களுக்கு ஆபத்து – அதிர்ச்சியளிக்கும் அதிகாரபூர்வ தகவல்!
இதனால் வேறு வழி இல்லாமல் மூர்த்தி, ஜீவா மற்றும் கதிர் மூவரும் இறுதி காரியங்களை செய்கின்றனர். தனத்தினால் இதனை தாங்கி கொள்ளவே முடியவில்லை. பல முறை அனைவரிடமும் இது பற்றி கூறுகிறார். ஆனால், யாராலுமே எதுவுமே செய்ய முடியவில்லை. தற்போது ட்விஸ்ட்டாக கண்ணன் இறுதி நேரத்தில் வந்து விடுவார் என்று கூறப்படுகிறது. தனது அம்மாவிற்கு இறுதி காரியங்களையும் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.