‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த ட்விஸ்ட் – ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் மூர்த்தியின் வீட்டுக்கு முன்னால் குடிவந்திருக்கும் காட்சிகள் சற்று ஆர்வத்தை தூண்டியுள்ள நிலையில், அதன் அடுத்த கட்ட கதைக்களம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஒரு முக்கிய திருப்பம் நிறைந்த கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட எபிசோடுகள் பயணிக்க உள்ளது. குறிப்பாக லட்சுமி அம்மாவின் இறப்புக்கு பிறகு பெரிய எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் வழக்கமான காட்சிகளுடன் இதுவரை நகர்ந்து வந்தது. ஆனால் இந்த திரைக் கதையில் தற்போது சூடு பிடிக்கும் விதமாக, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை மூர்த்தியின் வீடு முன்னால் குடியேற்றி கஸ்தூரி புதிய வில்லியாக உருவெடுத்துள்ளார்.
இமான் அண்ணாச்சி போல மாறி கலாய்த்த பிரியங்கா – பிக் பாஸ் சீசன் 5 ப்ரோமோ ரிலீஸ்!
அதே நேரத்தில் அவ்வப்போது மூர்த்தி குடும்பத்தினரை எதிர்த்து பேசி வம்பு வழக்கு செய்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, இப்போது மூர்த்தியின் வீட்டுக்கு எதிரே குடி வந்திருக்கிறார். தவிர புது வீட்டுக்கு குடிவந்த முதல் நாளிலே பாட்டுப்பாடி மீனா மற்றும் தனத்தின் கவனம் ஈர்க்க முயற்சிக்கும் ஐஸ்வர்யாவின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என பலரும் குழம்பி போயுள்ளனர்.
நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை நிராகரித்தது ஏன்?
இதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் சற்று ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டு, அப்கம்மிங் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கொஞ்சம் திமிரான லுக்குடன் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் புது பிரச்சனையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.