கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு அனுப்பி கதவை பூட்டிய மூர்த்தி – வெளியான அதிரடி ப்ரோமோ!

0
கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு அனுப்பி கதவை பூட்டிய மூர்த்தி - வெளியான அதிரடி ப்ரோமோ!
கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு அனுப்பி கதவை பூட்டிய மூர்த்தி - வெளியான அதிரடி ப்ரோமோ!
கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு அனுப்பி கதவை பூட்டிய மூர்த்தி – வெளியான அதிரடி ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால் அது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தான். இந்த சீரியலில் தற்போது புதிய திருப்பமாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனை அறிந்து கொள்ளும் குடும்பத்தினர் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.

மீண்டும் திரையுலகிற்கு வருவாரா விஜே அர்ச்சனா? ரசிகர்களிடம் சொன்ன விளக்கம்!!

கஸ்தூரி மற்றும் மல்லி இருவரும் பிரசாந்தை சமாதானம் செய்கின்றனர். பிரஷாந்திற்கு இந்த பெண்ணை பார்த்து நிச்சயம் செய்ததும் தனது தவறு தான் என்றும், இவர்கள் முன்பு பிரஷாந்திற்கு நல்ல பெண்ணாக பார்த்து கட்டி வைக்கிறேன் என்று மல்லி அனைவரிடமும் சவால் விடுகிறார். இதனால் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினருக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது. கண்ணன் இவ்வாறாக செய்திருப்பது தனத்தினை அதிகமாக பாதித்து விடுகிறது. அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் இருக்கிறார். மூர்த்தி கண்ணன் திருமணம் செய்து கொண்டதால் தனக்கும், கண்ணனுக்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது என்று அனைவரிடமும் கூறி விடுகிறார்.

தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மூர்த்தி அனைவரின் முன்பும் கண்ணனுக்கும் இந்த வீட்டினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறி அவரை தலை முழுகி விடுகிறார். தனக்கு இனி கண்ணன் தம்பி கிடையாது என்று கூறி விட்டு வீட்டின் கதவினை அடைத்து விடுகிறார். இதனால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கண்ணீருடன் வெளியே நிற்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது. இதற்கு அடுத்து வரும் எபிசோட்களில் கண்ணன் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் தனது நண்பர் வீட்டில் தங்குவதற்காக செல்லுவாராம். ஆனால், அவரது நண்பர்களும் அவரை போலவே படித்து கொண்டு இருப்பதால், அவர்களது வீட்டில் கண்ணனை திட்டி வெளியே அனுப்பி விடுவார்களாம். இதனால் இருவரும் கோவில் சென்று தங்குவார்களாம். இவ்வாறாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!