வீட்டில் மாட்டி கொள்ளும் கண்ணன், அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!!
விஜய் தொலைக்கட்சியில் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் லேட்டஸ்ட் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. காரணம், கூட்டு குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான சண்டைகள் மற்றும் அன்பு பரிமாற்றங்களை அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. இந்த சீரியலில் பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த கதாநாயகி தனத்தின் சீமந்த நிகழ்ச்சி தற்போது சில நாட்களுக்கு முன்பாக விமர்சையாக முடிந்தது.
வீடுகளுக்கு ரூ.3 லட்சம் வரை காப்பீடு திட்டம் – மத்திய அரசு!
அந்த எபிசோட் மிகவும் கோலாகலமாக விஜய் டிவி நட்சத்திரங்களுடன் நடைபெற்றது. இது ஒரு பக்கம் இருக்க, கண்ணன் தனது உறவினர் பெண்ணான ஐஸ்வர்யாவை காதலிக்கிறார். இவர்களது காதல் பற்றி ஐஸ்வர்யாவிற்கு நிச்சயித்த மாப்பிள்ளையாக பிரஷாந்திருக்கு தெரிய வருகின்றது. அவர் திருமணத்தை தானாகவே நிறுத்தி விடுவார் என்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நினைத்திருக்க, தான் ஐஸ்வர்யாவை யார் தடுத்தாலும் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதத்துடன் இருந்து வருகிறார்.
TN Job “FB Group” Join Now
இப்படியாக இருக்க, தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கண்ணன் ஏற்கனவே வீட்டில் இருந்து பணத்தினை திருடி அதனை ஐஸ்வர்யாவிற்கு பீஸ் கட்டியதை குடும்பத்தினர் அறிந்து கொள்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடையும் மூர்த்தி கண்ணனை அனைவரின் முன்பாக அடித்து விடுகிறார்.