ஜனார்தனனை அவமானப்படுத்திவிடும் எதிர் கடைக்காரர் – விறுவிறுப்பான காட்சிகளுடன் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கண்ணனை வீட்டினர் அனைவரும் கண்டிக்கின்றனர். மீனாவின் தந்தையை பக்கத்து கடைக்காரர் அவமானப்படுத்தி அடித்து விடுகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று ஜீவா மற்றும் கதிரிடம் வீட்டினர் கஸ்தூரி வந்து கத்தி விட்டு சென்றதை கூறுகின்றனர். ஜீவா மற்றும் கதிர் இருவரும் கண்ணனுக்கு அறிவுரை வழங்குகின்றனர். அதே போல் மூர்த்தியும் பதமாக கண்ணனுக்கு எடுத்துரைக்கிறார். வீட்டினர் அனைவரும் கண்ணனை படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால் கண்ணன் மொத்தமாக குழப்பம் அடைந்து விடுகிறார்.
இந்தியாவில் 75% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்!
பின், ஜீவா, கதிர், கண்ணன், முல்லை மற்றும் மீனா அனைவரும் தனத்தின் வளைகாப்பு பற்றி பேசுகின்றனர். தனத்திற்கு நிறைய பரிசுகள் கொடுக்க வேண்டும் என்று பேசுகின்றனர். அதற்காக பிளானும் செய்கின்றனர். பின், தனத்தின் அண்ணன் தனத்தின் வளைகாப்பிற்கு என்று பரிசு பொருட்கள், உணவு வகைகளை வாங்கி வைக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா அனைவரிடமும் தனக்கு பிரசாந்தை பிடிக்கவில்லை என்றும் கண்ணனை பிடித்து இருக்கிறது என்றும் கூறுகிறார். இதனால் ஐஸ்வர்யா சோகம் அடைந்து விடுகிறார். பின், தனத்தின் அண்ணன் ஜெகா கண்ணன் தங்கள் குடும்பத்திற்கு வேண்டாம் என்று கூறுகிறார். கண்ணன் செட்டில் ஆக இன்னும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்றும் கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், மூர்த்தி வளைகாப்பிற்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று அனைவரிடமும் கூறுகிறார். வீட்டினர் அனைவருக்கும் புது டிரஸ் வாங்க வேண்டுமே என்றும் கூறி விடுகிறார். மீனாவின் அப்பா ஜனார்த்தனன் மற்றும் அவரது பக்கத்து கடைக்காரர் ஒருவருக்கும் சண்டை வருகிறது. இருவருக்கும் சண்டை வலுத்ததும் எதிர் கடைக்காரர் ஜனார்தனனை அடித்து விடுகிறார். அதே போல் அவரை தள்ளியும் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.