கண்ணீருடன் முல்லைக்கு நன்றி சொல்லும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசொட்!!
விஜய் தொலைக்காட்சியில் இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிருக்கு என்ன வேண்டும் என்று மூர்த்தி கேட்கிறார். கதிர் தனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறதே தனக்கு போதும் என்று கூறுகிறார். அதன் பிறகு முல்லை கதிருக்கு ஒரு புதிய போன் வாங்கி தர சொல்லி மூர்த்தியிடம் கேட்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடர்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிரை பார்க்க என்று தனத்தின் அண்ணன் வருகிறார். தனக்கு மிகவும் பெருமையாக இருந்ததாக அவர் கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைகின்றனர். பின், அனைவரும் சாப்பிடும் போது மூர்த்தி கதிருக்கு ஏதேனும் வாங்கி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு என்ன வேண்டும் என்றும் கேட்கிறார்.
7 வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% ஆக உயர்வு!
அதற்கு கதிர் தனக்கு தனது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருந்தாலே போதுமானது என்றும் இது தான் தனக்கு என்றுமே வேண்டும் என்றும் கூறுகிறார். அனைவரும் கதிரை நினைத்து பெருமைபடுகின்றனர். கதிர் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விடுகிறார். பின், குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு ஏதேனும் பரிசு பொருள் தர வேண்டும் என்று யோசிக்கின்றனர். அனைவரும் ஒன்று கூறுகையில் முல்லை கதிருக்கு ஒரு புதிய மொபைல் வாங்கலாம் என்று யோசனையை கூறுகிறார். நல்ல யோசனையாக இருக்கிறதென்று மூர்த்தியும் வாங்கி தருவதாக வாக்கு அளிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின், கதிர் முல்லையிடம் தனது இந்த அத்தனை வெற்றிக்கும் நீ தான் காரணம் என்று கூறுகிறார். அதே போல் அவரை கட்டியணைத்து அழுகிறார். தான் மிகவும் மாறிவிட்டதாகவும் அதற்கு முல்லை மட்டுமே காரணம் என்று கூறி ஆனந்த கண்ணீர் விடுகிறார். பின், முல்லை கதிர் மகிழ்வதை பார்த்து தானும் மகிழ்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.