“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா கணவர் இப்படி தான் இருக்க வேண்டுமாம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி தனக்கு நடிகர் விஜய் போல மாப்பிள்ளை வேண்டும் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காவ்யா அறிவுமணி:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், விஜே சித்ரா மறைவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் களமிறங்கியவர் காவ்யா அறிவுமணி. அவர் அதற்கு முன்பாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். சீரியலில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மக்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் நடிகை காவ்யா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய முல்லை என்ற அவதாரம் எடுத்தார். தொடர்ந்து 1 வருடமாக முல்லையாக வாழ்ந்து வரும் அவர் தற்போது பேட்டி ஒன்றில் தனது வருங்கால கணவர் பற்றி பேசி இருக்கிறார்.
அதில் தனக்கு விஜய் என பெயர் வைத்துள்ள எல்லா நடிகர்களுடன் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் போல மாப்பிள்ளை வேண்டும் என தனது பல கனவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை மாற்றினால் நன்றாக இருக்கும் என சொல்லிய அவர், சினிமாவில் பல கஷ்டங்கள் இருக்கும் ஆனால் அது அனைத்தும் எனக்கு வரவில்லை. எனக்கு சினிமாவில் எந்த கஷ்டமும் இல்லை. தினமும் கேமரா முன்னால் நடித்துவிட்டோம் என்ற நிம்மதி போதும் என சொல்லி இருக்கிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அபிநய் – ரசிகர்கள் ஷாக்!
திருமணம் குறித்து கேட்டதற்கு அதெல்லாம் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து தான் யோசிப்பேன் என சொல்லி இருக்கிறார். மேலும் முல்லையாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா என்ற கேள்விக்கு புதிய முல்லை என பல இடங்களில் மக்கள் சொல்லும் போது சந்தோசமாக இருக்கும் என சொல்லி இருக்கிறார். பாரதி கண்ணம்மாவிலும் சரி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் சரி மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதே எனக்கு மகிழ்ச்சி என மனம் திறந்து பேசி இருக்கிறார்.