“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் கதிர் முல்லை – லீக்கான படப்பிடிப்பு புகைப்படம்!
விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் சீரியலான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட்ட நிலையில் கதையில் பெரிய ட்விஸ்ட் ஒன்று வர இருக்கிறது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் உடன் இணைந்து மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோட் உடன் மகா சங்கமம் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், அடுத்த கட்ட கதைக்களம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நேற்றைய எபிசோடில் முல்லை கதிரிடம் ஒரு சமையல் போட்டி பற்றி சொல்கிறார். அந்த சமையல் போட்டியில் வெற்றி பெற்றால் ரூபாய் 10 லட்சம் பரிசாக கிடைக்கும் என முல்லை சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
ஆனால் கதிர் உழைத்து சம்பாரித்தால் தான் நல்லது, அதனால் இந்த போட்டி எல்லாம் வேண்டாம் என சொல்கிறார். முல்லை கதிர் சொன்னதை கேட்டு கோவித்து கொள்கிறார். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் முல்லை சொன்னது போல கதிர் போட்டியில் கலந்து கொள்கிறார். அதில் வெற்றி பெறுவாரா என்பது எல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் திருப்பமாக இருக்க போகிறது. மேலும் இந்த எபிசோடுகள் எல்லாம் ஒரு கல்லூரியில் நடைபெற இருக்கிறது.
போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜய் டிவி நடிகர்.. தொடரை விட்டு நீக்கிய சீரியல் குழு – ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
அங்கே புது முல்லையாக லாவண்யா இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வெற்றி பெற்று அந்த தொகையை வைத்து குடும்பத்தின் கடன்களை அடைத்து கதிரும் முல்லையும் குடும்பத்துடன் சேர்ந்து விடுவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதனால் அடுத்த வார எபிசோட் முழுவதும் கதிர் முல்லையை சுற்றியே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.