முல்லையின் பிரசவ விவகாரத்தால் இரண்டாக பிரியப்போகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
செயற்கை முறை கருவுறுதல் வெற்றியடையுமா என குடும்பத்தினர்கள் பயத்தில் உள்ளனர். இந்நிலையில், கண்ணனும் கதிரும் சண்டையிடும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. முல்லையின் பிரசவ விவகாரத்தால் குடும்பமே இரண்டாக பிரிய போகும் நிலைமையில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார்.
ExamsDaily Mobile App Download
ஆனால், செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள 5 லட்சம் செலவாகும் என்பதால் தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறுகிறார். அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக மட்டும் விட்டுக் கொடுக்க முடியாது என கூறி மீனா சண்டை போடுகிறார். பின்பு, மூர்த்தியும் ஜீவாவும் எப்படியோ 5 லட்ச ரூபாயை ரெடி செய்கிறார்கள். முல்லைக்கு இந்த வாரத்தில் இருந்து செயற்கை முறை சிகிச்சை தொடங்க இருக்கிறது. செயற்கை முறை சிகிச்சை சில சமயங்களில் தோல்வியில் கூட முடிய வாய்ப்பிருக்கிறது.
கோபி, ராதிகா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!
சிகிச்சை தொடங்கப்பட்டு ஒரு மாதங்கள் கழித்து தான் செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா என்பதை சொல்ல முடியும். ஒரு வேளை செயற்கை முறை கருவுறுதல் தோல்வியில் முடிந்துவிட்டால் மறுபடியும் 5 லட்சம் கட்டி சிகிச்சை எடுக்க வேண்டும். இந்நிலையில், இந்த சிகிச்சை வெற்றி பெற வேண்டும் என அனைவருமே பயத்தில் உள்ளனர். தற்போது கதிரிடம் கண்ணன், ஒரு வேளை இந்த சிகிச்சை தோல்வியில் முடிந்தால் மீண்டும் 5 லட்சம் ரெடி செய்ய முடியாது என சண்டையிடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.