காதலரை கரம் பிடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – வைரல் எமோஷனல் வீடியோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு முன்னாள் ஜோடியாக நடித்த சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகா விற்கு தனது காதலர் சத்ய தேவை திருமணம் செய்துகொண்டார், இவர் தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
நடிகை வைஷாலி :
தமிழில் ராஜா ராணி, கோகுலத்தில் சீதை, மகராசி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்தவர் சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகா .இவர் சென்னயில் பிறந்து வளர்ந்தவர் படிப்பையும் சென்னையிலேயே முடித்தார். இதுவரை நடித்த சீரியல்களில் எல்லாம் பெரும்பாலும்அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து மாலை நேரம் என்ற குறும்படத்திலும் நடித்தார். சீரியல் மற்றும் குறும்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
கண்ணம்மாவிடம் இருந்து ஹேமாவை பிரித்து செல்லும் பாரதி – விறுவிறுப்பாகும் அடுத்தகட்ட கதைக்களம்!
இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி நிறைய ரீல்ஸ் வீடியோக்களில் அதிகம் நடித்து வீடியோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த வியோக்கள் அதிக லைக்களையும் பெற்று வருகிறது. வைஷாலி, சத்ய தேவ் என்பவரை காதலித்து வந்தார். இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தெரிவித்தார். சமீபத்தில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்யாண ஷாப்பிங் என்று கேப்ஷனை போட்டு அவர் காதலனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றாயும் பதிவிட்டார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவ.1 முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – அமைச்சர் உத்தரவு!
இந்நிலையில் நடிகை வைஷாலி தனிகா தனது காதலரான சத்யதேவ் என்பவரை மிக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இருவீட்டார் முன்னிலையில் இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது வைஷாலி இன்ஸ்டாவில் தனது திருமண நிகழ்வு போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறார். தற்போது அந்த விடீயோக்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.