‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்த நடிகை ஷீலா!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறந்துவிட்ட நிலையில், அந்த சீரியலில் அம்மாவாக நடிக்கும் ஷீலா காதாபாத்திரம் முடிவதை நினைத்து வருத்தத்துடன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷீலா. தற்போது சீரியலில் அவர் கதாபாத்திரம் இறந்து விட்டது போல காட்டப்படுகிறது. நிஜத்தை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் இனிமேல் நடிக்க மாட்டார் என்பதால் அது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் இறந்தது போல நடித்தது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது என சொல்கிறார். சரியான வெயிலில் படுக்க வைத்திருந்தார்கள் என தெரிவித்தார்.
மாமியார் இறந்த சோகத்தில் பாட்டு பாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – ரசிகர்கள் ஷாக்!
3 ஆண்டுகள் இந்த சீரியலில் நடித்துள்ளேன். நல்ல ரீச் கொடுத்த நிலையில், சீரியலில் இருந்து விலகியது கஷ்டமாக இருக்கிறது என அவர் தெரிவிக்கிறார். இதெல்லாம் சினிமா வாழ்க்கையில் சகஜம் தான் இருந்தாலும் குடும்பத்தை பிரிவது போல இருக்கிறது என அவர் தெரிவிக்கிறார். இந்த சீரியலில் மட்டுமே என் கதாபாத்திரம் முடிவடைந்துள்ளது விரைவில் மற்றொரு சீரியலில் நான் தொடர்வேன் என அவர் தெரிவிக்கிறார். மேலும் சித்ரா பற்றி அவர் வருத்தத்துடன் பேசுகிறார்.
அஞ்சலி வளைகாப்பு முதல் கண்ணம்மா இரட்டை குழந்தை வரை – NO.1 சீரியலான “பாரதி கண்ணம்மா”!
நானும் சித்ராவும் ஒரே அறையில் தான் இருப்போம், அதனால் அவர் நடித்த படம் பார்க்க எனக்கு தைரியம் இல்லை என சொல்கிறார். அவருக்கு நிஜத்தில் இரண்டு மகன்கள் மருமகள்கள், பேரன்கள் இருப்பதாக அவர் தெரிவித்து, சீரியல் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் நல்ல மகன்கள் என தெரிவித்துள்ளார். என் கதாபாத்திரம் முடிய இருக்கிறது என எனக்கு சொல்லவில்லை. ஆனால் இத்தனை ஆண்டு சினிமாவில் இருக்கேன் அதனால் எனக்கே தெரிந்துவிட்டது என அவர் வருத்தத்துடன் சொல்கிறார்.