விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையின் குடும்ப புகைப்படம் – இணையத்தில் வைரல்!
விஜய் டிவியில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை உணர்த்தும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில், முல்லையின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கதிரை காணவில்லை, என்ன ஆச்சு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் நெகட்டிவ் ரோல் இல்லாத ஒரே சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலில், அண்ணன் தம்பிகள் என 4 பேர் ஒற்றுமையாக இருந்த நிலையில், கண்ணனின் காதலால் குடும்பம் பிரிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கண்ணன் பிரிந்த சோகத்தில் லட்சுமி அம்மா இறந்து விடுகிறார். ஆனால் அம்மாவின் இறப்பிற்கு வர முடியாமல் கண்ணன் நிலைமை சதி செய்கிறது. அதில் இருந்து தற்போது பழைய நிலைக்கு குடும்பத்தினர் மீண்டு வருகின்றனர்.
பாரதி, கண்ணம்மாவின் இரட்டை குழந்தையை கடத்திய வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
மேலும் இன்னும் ஒரு வாரத்தில் தனத்திற்கு குழந்தை பிறக்க போகிறது. கண்ணனும், ஐஸ்வர்யாவையும் எங்கேயும் செல்லவிடாமல் ஊர் மக்கள் உங்களால் தான் அம்மா இறந்து விட்டார் என பேசுகின்றனர். இதனால் கண்ணன் மன வருத்தத்தில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், நாளைய எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல இருக்கின்றனர். அப்போது கண்ணன், ஐஸ்வர்யாவை அழைக்க வேண்டும் என தனம் சொல்கிறார்.
இந்து பையனை காதலிக்கும் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் வாழ்த்து!
அதற்கு மூர்த்தி சம்மதம் தெரிவிப்பது போல ப்ரோமோ ஒன்றும் வெளியாகி உள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் கஸ்தூரி என்ன பிரச்சனை செய்வார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தற்போது கஸ்தூரி உடன் மல்லியும் சேர்ந்துள்ளார். இந்நிலையில் முல்லை குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும் பழைய முல்லையான சித்ராவை மிஸ் செய்வதாகவும், கதிர் ஏன் இந்த குடும்ப புகைப்படத்தில் இல்லை எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.