விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் கோலாலமாக ஒளிபரப்பாகி வரும் தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் இன்று சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு மகேஷ், சூப்பர் சிங்கர் போட்டியாளர்களான மானசி மற்றும் அபிலாஷ் இருவரும் பாட்டு பாடுகின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடக்கின்றது. இதில் தனத்தின் அண்ணன் குடும்பத்தினர் கலந்து கொள்கின்றனர். பின், தனத்தை மேடைக்கு அழைத்து வருகின்றனர். தனம் மற்றும் மூர்த்தி இருவரும் சந்தோசத்துடன் மேடைக்கு வருகின்றனர். தனத்தின் அம்மா இது தங்களது பல வருட கனவு என்று கூறி, அவருக்கு நெட்டி முறிக்கிறார்.
கண்ணம்மா வீட்டில் தங்கும் ஹேமா, அடுத்து என்ன நடக்கும்? வெளியான புதிய ப்ரோமோ!
பின், கண்ணன் விஜய் தொலைக்காட்சியின் தற்போதைய “சூப்பர் சிங்கர்” போட்டியாளர்களான மானசி மற்றும் அபிலாஷ் இருவரையும் வரவழைத்து இருக்கிறார். அவர்கள் இருவரும் வந்து தனத்திற்கு என்று பாட்டு பாடுகின்றனர். இதனை தனம் குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் ரசிக்கின்றனர். பின், இருவரையும் மாலை மாற்றி கொள்ள சொல்கின்றனர். இருவரும் வெட்கத்துடன் மாலையை மாற்றி கொள்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
அப்போது ஜீவாவிற்கு ஒரு போன் கால் வருகிறது. அதனை தொடர்ந்து அவர் கதிர் மற்றும் மீனாவை அழைத்து கொண்டு வெளியே செல்கின்றனர். குடும்பத்தினருக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான “ஈரோடு” மகேஷ் சிறப்பு விருந்தினராக வருகிறார். அவர் வந்ததும் இது ஜீவாவின் ஐடியா என்று தெரிந்து கொள்கின்றனர். பின், மகேஷ் வந்து தனத்தை பற்றியும், மூர்த்தி தங்களது குடும்பத்திற்காகவும், தனது தம்பிகளுக்காகவும் செய்த தியாகங்களை பற்றியும் பேசுகிறார். பின், தனத்திற்கு சடங்குகளை செய்ய குடும்பத்தினர் ஆயத்தமாகுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!