பாண்டியன் ஸ்டோர்ஸில் களைகட்டும் தனம் வளைகாப்பு நிகழ்ச்சி – இன்று முதல் ஒளிபரப்பு!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மூர்த்தி தன்னால் தனத்திற்கு என்று ஒரு தங்க நகை எடுத்து கொடுக்க முடியவில்லையே என்று வருந்துகிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனத்திற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கதிர் மற்றும் ஜீவா இருவரும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியினை கோலாகலமாக நடத்த வேண்டும் என்று அழகான மண்டபம் பிடித்து அதற்கு அலங்காரம் செய்து இருக்கின்றனர். மண்டபத்தினை பார்த்து விட்டு தனம் மற்றும் மூர்த்தி இருவரும் அசந்து விடுகின்றனர். பின், தனத்திற்கு மீனா மற்றும் முல்லை இருவரும் அலங்காரம் செய்ய உதவுகின்றனர். மூர்த்தியை அலங்காரம் செய்ய ஜீவா உதவுகிறார்.
CBSE 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு – ஜூலை 25 வரை காலக்கெடு நீட்டிப்பு!
தனம் தனக்கு நகை அவ்வளவாக வேண்டாம் என்று மறுக்கும் போது மீனா மற்றும் முல்லை இருவரும் அவரை மிரட்டி நகைகளை அணிய உதவுகின்றனர். பின், மீனாவின் அம்மா மற்றும் அப்பா இருவரும் வந்து தனத்தினை பார்த்து தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். இதனால் தனம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வீட்டினர் அனைவரும் நிகழ்ச்சியின் வேலைகளில் பிசியாக இருக்கின்றனர். அப்போது பிரசாந்த் மற்றும் மல்லிகா இருவரும் வருகின்றனர்.
அவர் வந்ததும் தனத்திடம் சேலை மிகவும் சிம்பிளாக இருப்பதாக கூறுகிறார். இதனை கேட்டு ஆச்சரியம் அடையும் தனம் இந்த சேலையே 23 ஆயிரம் ரூபாய் என்று கூறுகிறார். அப்போது அவர் குறைந்ததும் 50 ஆயிரத்திற்கு பட்டுப்புடவை எடுத்து இருக்க வேண்டும் என்றும், கஞ்சம் பிடித்த குடும்பம் என்று கூறி விடுகிறார். இதனை கேட்கும் மீனாவிற்கு கோபம் வந்து அந்த அறையினை விட்டு சென்று விடுகிறார். பின், மூர்த்தி ஜீவாவிடம் தனம் திருமணம் செய்து வந்த போது பல தங்க நகைகள் வைத்திருந்ததாகவும், தற்போது அப்படி இல்லை என்றும் கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
தான் தனத்திற்கு என்று ஒரு தங்கநகை கூட வாங்கி தந்தது இல்லை என்று கூறி வருத்தமும் அடைகிறார். இதனை கேட்கும் ஜீவா, அப்போது ஒரு தங்க நகையினை அண்ணிக்கு என்று வாங்கி விடலாம் என்று கூறுகிறார். கடையில் இருந்து பணம் எடுத்து நகை வாங்க வேண்டாம் என்று மறுத்து விடுகிறார். பின், ஜீவா தான் வந்தவர்களை கவனிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். ஜகா மற்றும் அவரது குடும்பத்தினர் சீர் வரிசைகளுடன் பட்டாசு வெடித்து மண்டபத்திற்கு வருகின்றனர். தூரத்தில் இருந்து இதனை பார்க்கும் தனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் செய்யவும்!!