பத்திர பதிவிற்கு வர முடியாத நிலைமையில் கதிர், கோவப்பட்ட மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
பத்திர பதிவிற்கு வர முடியாத நிலைமையில் கதிர், கோவப்பட்ட மூர்த்தி - இன்றைய
பத்திர பதிவிற்கு வர முடியாத நிலைமையில் கதிர், கோவப்பட்ட மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!

பத்திர பதிவிற்கு வர முடியாத நிலைமையில் கதிர், கோவப்பட்ட மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் போட்டி நடத்துபவரிடம் முக்கியமான வேலை இருப்பதாக சொல்ல, ஆனால் அவர்கள் போக அனுமதிக்கவில்லை. உடனே எதிர் தரப்பு போட்டியாளர் கதிர் முல்லையை கணவன் மனைவி இல்லை என சொல்ல, உடனே கதிர் கோவப்பட்டு அடித்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் முல்லையும் போட்டி நடத்துபவரிடம் உடனே நாங்க கிளம்ப வேண்டும் என சொல்ல, ஆனால் போட்டி நடத்துபவர் அவ்வளவு செலவு செய்து போட்டி நடத்துகிறோம். ஆனால் நீங்கள் இப்படி கிளம்ப வேண்டும் என சொன்னால் என்ன அர்த்தம் என கேட்கிறார். அப்போது எதிர் தரப்பு போட்டியாளர், இவங்க உண்மையான கணவன் மனைவியாக இருக்கமாட்டார்கள். அந்த பெண்ணை எங்கே இருந்தாவது தள்ளி கொண்டு வந்திருப்பான், இப்போ அந்த பொண்ணு வீட்டிற்கு போக நேரமாகிவிட்டது போல என பேச,கதிருக்கு கோவம் வருகிறது.

கதிர் அவனை அடிக்க, உடனே அவனுடைய ஆதரவாளர்கள் கதிரை அடிக்கின்றனர். பின் எல்லாரும் சேர்ந்து கதிரையும் அவனையும் தடுக்கின்றனர். போட்டி நடத்துபவர் என்ன இதெல்லாம் என கேட்கிறார். கதிர் ஒழுங்காக இவனை மன்னிப்பு கேட்க சொல்லுங்க என சொல்ல, அனைவரும் மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். தவறாக பேசியவன் முல்லையிடம் மன்னிப்பு கேட்கிறான். கதிர் நாங்க கிளம்புறோம் என சொல்ல, ஆனால் போட்டி நடத்துபவர் போக முடியாது என சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி, கதிர், கண்ணன் பத்திர அலுவலகத்திற்கு வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

பின் நிலத்தை விற்பவர் பதிவு முடிந்ததும் சீக்கிரமாக வீடு கட்டுங்க என சொல்கிறார். இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என மூர்த்தி கேட்க, இன்னும் அரை மணி நேரத்தில் முடிந்துவிடும் என சொல்கிறார். இன்னொரு தம்பி வரவில்லையா என கேட்க ஆமாம் வந்துவிடுவான் என சொல்கிறார் மூர்த்தி. மறுபக்கம் கதிர் கோவமாக இருக்க முல்லை நான் மட்டும் இங்கே இருக்கேன் என சொல்கிறார். ஆனால் கதிர் முல்லையிடம் கோவமாக பேசுகிறார். பின் போட்டி நடத்துபவரிடம் போன் வாங்கி பேச, ஆனால் கதிர் முல்லை போனை மூர்த்தி எடுக்கவில்லை.

கோபிக்கு வந்த தபாலை திருப்பிவிட்ட ராமமூர்த்தி, பாக்கியாவிடம் சண்டை போடும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

கதிர் நீண்ட நேரமாகி வராமல் இருப்பதால் மூர்த்தி கோவமாக இருக்கிறார். ஜீவா அவன் கண்டிப்பாக வந்துவிடுவான் என உறுதியாக பேசுகிறார். மூர்த்தியிடம் தம்பி இன்னும் வரவில்லையா என கேட்க, வந்துவிடுவான் என சொல்கிறார். பின் கதிர் அடித்த எதிர் டீம் ஆள்,கதிரை அடிக்க சொல்லி அடி ஆட்களை தயார் செய்கிறார். இந்த போட்டியில் இருந்து அவன் உயிரோடு போக கூடாது என அவர்கள் பேசுவதை முல்லை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மூர்த்தி கதிருக்காக காத்திருக்க ஆனால் கடைசிவரை கதிர் வரவில்லை. இடத்தை விற்பவர் தம்பி வராமல் எதுவும் நடக்காது என சொல்ல, ஜீவா சென்று கதிரை கூப்பிட செல்கிறார். பின் முல்லை வந்து அந்த எதிர் டீம் பேசியதை பற்றி பதட்டமாக சொல்ல வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!