புது கடைக்கு பூஜை போடும் குடும்பம், கண்ணனுக்கு பாயசம் கொடுக்கும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடில் புதிதாக கட்டும் கடைக்கு அனைவரும் பூஜை போடுகின்றனர். பிறகு தனம் பாயசம் செய்து அதனை கண்ணன் வீட்டுக்கு கொடுத்து விடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடில் புது கடை கட்டுவதற்கு போட்டிருக்கும் பிளானுக்கு அப்ரூவல் வாங்குவது பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, இப்போ இருக்க கடை யாரு பேருல இருக்கு, புதுசா கட்டப்போற கடை உங்க பேர்லயா இருக்கும் என மீனா கேட்க இந்த கடை ரெண்டுமே எங்க நாளு பேரு பேர்ல தான் இருக்கு என மூர்த்தி பதில் கூறுகிறார். தொடர்ந்து இதற்கு முன்னால் நடந்த சண்டையை பற்றி முல்லை கூற நீ ஏன் அதை பற்றி பேசிட்டு இருக்க என கதிர் கூறுகிறார்.
ஹேமாவிடம் லட்சுமியை அக்கா என அழைக்க சொல்லும் கண்ணம்மா – இன்றைய ‘பாரதி கண்ணம்மா’ எபிசோடு!
ஆனால் மீனா, ஐஸ்வர்யாவிடம் பேசியதை பற்றி முல்லை கூற மீனா சமாளிக்கிறார். பிறகு மீனா மற்றும் முல்லைக்கு இடையே நடந்த சண்டையை கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். இப்போது புது கடையை கட்டுவதற்கு பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் லட்சுமி அம்மா நியாபகம் வருகிறது. பூஜை முடிந்ததும் தனம், பாயசம் செய்து கொண்டு வந்து அதை முல்லையிடம் கொடுத்து பக்கத்து வீட்டுக்கும் கொண்டு போய் கொடுக்க சொல்லுகிறார். எல்லார் வீட்டுக்கும் என அழுத்தி சொல்லுகிறார். பிறகு பாயாசம் கொடுத்துவிட்டு முல்லை வீட்டுக்கு வந்ததும் யாரு கிட்டயெல்லாம் கொடுத்த என கேட்கிறார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு!
நீ எதிர் வீட்டுக்கு கொடுக்கலையா என கூறிவிட்டு கண்ணனுக்கு தனியாக பாயசம் கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு அந்த பாயசத்தை எடுத்துக்கொண்டு கண்ணன் வீட்டுக்கு செல்ல அங்கு இரண்டு பேர் நின்று கொண்டு முல்லையை கலாய்க்கின்றனர். அப்போது அங்கு கண்ணன் அங்கு வர பாயசத்தை வாசலில் வைத்து விட்டு புது வீடு கட்டப்போகும் கதையை சொல்கிறார் முல்லை. பிறகு கயலுக்கு தடுப்பூசி போட வேண்டும் என மீனா சொல்லிவிட்டு ஜீவாவை கூட்டி கொண்டு செல்கிறார். இத்துடன் இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு முடிவடைகிறது.