மீனாவை ஐஸ் வைக்கும் ஐஸ்வர்யா, கலாய்க்கும் கண்ணன் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கலாட்டா!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது சற்று நிலைமை மாறி கலகலப்பாக சென்று வருகிறது. தற்போது வெளியான புதிய ப்ரோமோ பற்றிய விவரங்களை காண்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விட்டனர். இதனால் மொத்த குடும்பமும் கலகலப்பை இழந்து சோகத்தில் இருந்து வந்தது. அதேசமயம், வீட்டை விட்டு வெளியில் சென்ற கண்ணன் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர். கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவும் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா இனி இல்லை? ரசிகர்களுக்கு சீக்ரெட்டை உடைத்த நடிகை!
அதேபோல், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டின் எதிரிலேயே குடி வருகின்றனர். இதனால் முதலில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் மீனா மட்டும் அவ்வப்போது ஐஸ்வர்யாவுடன் ரகசியமாக பேசி வருவார். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மீனா வீட்டு வாசலில் அமர்ந்திருக்க, அந்த பக்கம் கண்ணனும், ஐஸ்வர்யாவும் அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து உள்ளனர். அப்போது, ஐஸ்வர்யா மெல்ல மீனாவிடம் பேச்சு கொடுக்கிறார்.
ஒரே வாரத்தில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த சன் டிவி ‘கயல்’ சீரியல் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
இந்த வீட்டுக்கு நான் முன்னாடிலாம் வரும் போது நீங்க ரொம்ப சிடு மூஞ்சின்னு நெனைச்சேன். ஆனால் இப்போ தான் தெரியுது நீங்க அப்டிலாம் இல்லன்னு. உடனே மீனா என்னது சிடுமூஞ்சியா என்று எகிற, அய்யய்யோ, இப்போ இந்த வீட்லயே நீங்க தான் ரொம்ப நல்லவங்கனு சொல்லி சமாளிக்கிறார். மீனா ஆமா ஆமா அது என்னமோ உண்மை தான் அப்டினு சொல்கிறார். உடனே கண்ணன் ஐஸ்வர்யாவை அதட்டுகிறார். வீட்டு ஆளுங்கள இப்டிலாம் சொல்லாத என்று சத்தம் போடுகிறார்.