லட்சுமி அம்மாவிற்கு கொள்ளி வைக்கும் மூர்த்தி – இறுதி சடங்கில் லாஜிக்கை மறந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இயக்குனர்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் முதல் லட்சுமி அம்மா இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து காட்சிகளும் உண்மையாக எடுக்கப்பட்ட நிலையில், இயக்குனர் கடைசியில் இந்த லாஜிக்கை மறந்துவிட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் குடும்ப சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் வீட்டை விட்டு வெளியே போன சோகத்தில் இருந்த லட்சுமி அம்மா திடீரென இறந்து விடுகிறார். அந்த நேரம் பார்த்து ஜனார்த்தனன் வேலையாக கண்ணனை திருச்சி வரை அனுப்புகிறார். போனை மறந்துவிட்டு சென்றதால் கண்ணனிற்கு தகவல் சொல்ல முடியவில்லை. இந்நிலையில் லட்சுமி அம்மாவிற்கு இறுதி சடங்குகள் அனைத்தும் நிஜமாக நடப்பது போல தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் விடாமல் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
தனத்திற்கு குழந்தையாக பிறக்கும் லட்சுமி அம்மா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!
அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்த லட்சுமி அம்மா தனது நடிப்பை நன்றாக நடித்துள்ளார். மேலும் இன்றைய எபிசோடில் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டு சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வெளியான புதிய ப்ரோமோவில் மூர்த்தி தனது அம்மாவிற்கு கொள்ளி வைப்பது போல் காட்டப்படுகிறது. மூர்த்தியின் மனைவியான தனம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் கொள்ளி வைப்பது போல் காட்டப்படும் இந்த புரோமோ ரசிகர்களின் இடையே பலவிதமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பிரபல தமிழ் நடிகையின் தந்தை திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!
ஒரு சடங்கு கூட விடாமல் எடுக்கப்பட்ட காட்சிகளில் இந்த லாஜிக்கை இயக்குனர் எப்படி மறந்தார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கடைசி வரை கண்ணன் அம்மா முகத்தை பார்க்கமுடியாமல் போனது போல காட்டப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் அண்ணன்களை கண்ணன் புரிந்து கொள்வாரா அல்லது அண்ணன்களுக்கு எதிராக மாறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.