கடைதிறப்பு விழாவிற்கு சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் – அடித்து பிடித்து செல்பி எடுத்த ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மருமகள்களான தனம் , முல்லை மற்றும் மீனா என மூவரும் கடைதிறப்பு விழா ஒன்றிற்கு சென்றுள்ளனர். இவர்களை பார்க்க எக்கச்சக்கமான ரசிகர்கள் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் மக்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றுள்ளது. சீரியலை விட இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகளுக்கும் மக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. ஷூட்டிங் போக மீத நேரம் முழுவதையும் அரட்டையடித்தே போக்குகின்றனர்.
Exams Daily Mobile App Download
அவ்வப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் தனம், முல்லை மற்றும் மீனா மூவரும் ஷூட்டிங்கில் செய்யும் அரட்டைகள், புகைப்படங்கள் என அனைத்தும் சமூக வலை பக்கங்களில் வெளியாகி வருகிறது. தற்போது சீரியலில் முல்லைக்கு மறுபடியும் மருத்துவம் பார்ப்பார்களா எனவும், மறுபடியும் 5 லட்சத்தை ரெடி செய்ய என்ன செய்ய போகிறார்கள் அல்லது சீரியலை வேறு ட்ராக்கில் கொண்டு செல்ல போகிறார்களா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஒரு கடை திறப்பு விழாவிற்காக தனம் , முல்லை மற்றும் மீனா என மூன்று மருமகள்களையும் அழைத்திருக்கிறார்கள். அப்போது மூவரையும் பார்க்க அந்த கடைக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அனைவருமே மூவருடனும் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த இந்த வீடியோவை தனம் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், எங்கு சென்றாலும் ரசிகர்களின் ஆதரவு கிடைக்கையில் சந்தோசமாக இருக்கிறது என கூறியுள்ளார்.