லட்சுமி அம்மாவை சீரியலில் இருந்து தூக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழுவினர் – ரசிகர்கள் அதிர்ச்சி!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து திடீர் என்று நடிகை ஷீலா விலகியதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித சோகமாக கட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணன் தம்பிகளின் அம்மாவான லட்சுமி இறந்து விடுவது போல கதைக்களம் சென்று வருகிறது. இந்த குடும்பத்தின் கடைசி தம்பியான கண்ணன் தனது அம்மாவை பார்க்க முடியாமல் போய் விடுகிறது. இதனால் அண்ணன் மற்றும் தம்பிகளுக்கிடையே சண்டை வருகின்றது. இப்படியாக இருக்க, இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்து லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஷீலா இனி சீரியலில் வர மாட்டார்.
VJ பிரியங்கா, மணிமேகலை YouTube மூலம் ஈட்டும் வருமானம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!
அவர் திடீர் என்று விலகுவதற்கான காரணத்தினை சீரியல் குழுவினர் ஒழுங்காக தெரிவிக்கவில்லை. இது குறித்து நடிகை ஷீலாவிடம் பேட்டியில் கேட்டபோது சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இவ்வாறாக தன்னை இறப்பது போல் காட்டியதாக கூறினார். அதே போல மற்ற சீரியல்களில் ஒருவர் இறப்பது போல காட்டினால் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவிப்பது போல காட்டி விடுவர். ஆனால், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தான் இறுதி காரியங்கள் செய்வது வரை காட்டி உள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும், உண்மையான காரணம் என்னவென்றால், நடிகை ஷீலா நடிகர் விக்ராந்தின் அம்மா என்று அனைவரும் அறிந்ததே.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” லட்சுமி அம்மாவின் கடைசி எபிசோட் – வெளியான புகைப்படம்!
நடிகர் விக்ராந்த் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குகொள்ள இருந்தாராம். ஆனால், அதற்குள்ளாகவே அவர் வேறு ஒரு சேனலில் ஒரு ஷோவில் பங்கேற்க கால்ஷீட் கொடுத்து விட்டாராம். இதனை தெரிந்து கொண்டு தான் அவரது அம்மா நடிக்கும் கதாபாத்திரத்தினை இறந்தது போல காட்டி விட்டார்களாம். இது சினிமா துறையில் நடப்பது தான் என்று கூறினாலும், வேறு ஒரு காரணமும் கூறுகின்றனர். அது என்னவென்றால் சன் தொலைக்காட்சியில் ‘பூவே உனக்காக’ சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகும் அதே 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த இரு சீரியல்களுக்கும் போட்டி நடக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தவே இது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று சின்னத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.