கண்ணனை மீண்டும் சேர்த்து கொள்ளும் தனம் & கதிர்? வெளியான புகைப்படம்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார். இந்நிலையில் அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டது போல புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவி சீரியல்களில் நெகடிவ் ரோல் (வில்லன்) இல்லாத ஒரு சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த சீரியலில் அண்ணன், தம்பிகள் என 4 பேர் பாசத்துடன் இருக்கின்றனர். 4வது கடைக்குட்டி கண்ணன் முறைப்பெண் ஐஸ்வர்யாவை காதலிக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா வீட்டில் பிரசாந்த் உடன் திருமண ஏற்பாடுகள் செய்ததால் வேறு வழி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அதனால் மூத்த அண்ணன் மூர்த்தி கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்.
“விண்ணைத் தாண்டி வரப் போகிறார், சிம்பு” – புதிய அவதாரம்! பேஷன் விளம்பரம்!
வெளியே செல்லும் கண்ணன் தங்க வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறார். ஆனால் அண்ணன்கள் கண்ணனுக்கு வேறு ஒருவர் மூலமாக உதவி செய்கின்றனர். தனம் கண்ணனை பற்றி பேச மூர்த்தி கோவப்பட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி திட்டுகிறார். ஆனால் இன்றைய எபிசோடில் அவரே கண்ணனுக்கு உதவி செய்கிறார். நகையை அடகு வைக்க போகும் போது கடைக்காரர் மூர்த்திக்கு போன் செய்து சொல்கிறார். உடனே மூர்த்தி நகை வாங்காமல் பணம் கொடுக்கும் படி சொல்கிறார்.
ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்து கொண்ட கண்ணம்மா? வெளியான புகைப்படம்!
இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு தலத்தில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் தனம், கதிர் மற்றும் கண்ணன் இணைந்து செல்பி எடுத்துள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை கண்ணனை குடும்பத்தில் சேர்த்து கொண்டனரா என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் என்ன தான் தம்பி தப்பு செய்தாலும் அண்ணன் பாசம் போகுமா என கமெண்ட் செய்துள்ளனர்.