பான், ஆதார் கார்டு இணைப்பு – நாளை இறுதி நாள்! ரூ.1000 அபராதம்!!
நிரந்தர கணக்கு எண் (பான் – PAN) கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கி உள்ளது. இதற்காக கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ள நிலையில், நாளையுடன் (மார்ச் 31) முடிவுக்கு வருகிறது. அதற்குள் இணைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பான் & ஆதார் இணைப்பு:
வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய பான்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் கார்டு உடன் பான் இணைக்கப்படவில்லை என்றால், வங்கிக் கணக்கு பணிவர்த்தனைகள், ஓய்வூதியம், உதவித்தொகை மற்றும் எல்பிஜி மானியம் போன்ற பண பலன்களைப் பெறுவது போன்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு பழைய பான் கார்டினை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் இது அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஒரு நபர் தனது பான் கார்டுடன் ஆதார் எண்ணை குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் இணைக்காவிடில் அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அந்த பான் கார்டு செல்லாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, அதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதிக்குள் (நாளை) முடிவடைகிறது. இதனால் ஆன்லைனிலேயே எளிய முறையில் பான் – ஆதார் இணைப்பதற்கான வழிமுறைகளை தற்போது காணலாம்.
- வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைக – https://www.incometaxindiaefiling.gov.in/home
- வலைப்பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள பிரிவின் கீழ், “இணைப்பு ஆதார்” (Link Aadhaar) என்பதைக் கிளிக் செய்க.
- ஆதார் படி உங்கள் பான், ஆதார் எண் மற்றும் பெயரை உள்ளிடவும்.
- பின்னர் திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள்.
- அதனை உள்ளிட்டு ‘இணைப்பு ஆதார்’ ஆப்ஷனை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – தனியார் கல்வி நிறுவனங்களின் எதிர்பார்ப்பு!!
வங்கிக் கணக்கினை கையாள்வது, நிதி அல்லது பங்குகளை வாங்குவது மற்றும் ரூ.50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகள் செய்வது போன்ற பல செயல்களுக்காக பான் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.
Pancard and adhare Card link