தமிழக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!
தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓய்வூதியத் திட்டம்
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் அரசாங்கத்திற்கு நீண்ட நாட்களாக வைத்து வரும் ஒரு முக்கிய கோரிக்கை பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தான். ஆனால், இந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசுக்கு நிதி சிக்கல்கள் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் செயல்பாடுக்ள குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதாவது தமிழக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசுப் பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. தமிழக அரசு ஊழியர்களுக்கு 01.04.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 6,02,377 ஊழியர்களும் இந்த திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். இத்திட்டத்தின்படி , ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பங்குத்தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொகை 2003ம் ஆண்டில் இருந்து மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இப்போது, 31-03-2022 நிலவரப்படி அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் வைப்புத்தொகை ரூ .53,555,75 கோடியாக உள்ளது.
கோபியிடம் குடிக்க வேண்டாம் என கெஞ்சிய எழில், ராதிகாவை சமாதானம் செய்ய போகும் கோபி – இன்றைய எபிசோட்!
இது இந்திய ஆயுள் நிறுவனத்தின் புதிய குழு ஓய்வூதிய திட்டத்தில் ரூ .41,264.63 கோடியாகவும், ரிசர்வ் வங்கியின் மூலம் ஒன்றிய அரசின் கருவூலப் பட்டியல்களில் ரூ.12,000 கோடியாகவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தொகையை வேறு எதற்காகவும் எடுத்து பயன்படுத்தவில்லை.இப்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் வட்டி பொது வருங்கால வைப்பு நிதிக்கான 7.1 சதவீத வட்டி வீதத்தில் கணக்கிடப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.