தமிழக அரசு பயிர்க்கடன், 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – EPS வலியுறுத்தல்!
தமிழகத்தில் கூட்டுறவு சங்ககளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி அரசு செய்ய வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
பயிர்க்கடன், நகை கடன் தள்ளுபடி;
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் மற்றும் 5 சவரன் வரை பெற்றுள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்பயப்படும் என வாக்குறுதி அழித்தரர் .அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டார். அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி பயிர் கடன், மற்றும் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
IOB வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – எளிய முறையில் கடன்!
இந்த நிலையில் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரால் பயிர் கடன்களை தள்ளுபடியை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே திமுக எந்த நிபந்தைகளுக்கும் இன்றி கூட்டுறவு சங்ககளில் பெறப்பட்ட நகை மற்றும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே திமுகவினர் தேர்தலில் அளித்த வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றை நிறைவேற்றவில்லை. திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்று கூறி அதிமுகவினர் புகார் அளித்தனர். மேலும் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.