கொரோனா தொற்று மையமாக மாறும் அரசு பள்ளி – பழனியில் பொது மக்கள் அதிர்ச்சி
தமிழகத்தின் பழனி பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி நோய்பரப்பும் மையமாக மாறி வருவதாக பொது மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அனைத்தும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நெருங்கி வரும் காரணத்தாலும், தொற்றின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதாலும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
வாழ எளிதான நகரங்களில் மதுரை 22வது இடம் – மத்திய அரசு ஆய்வு!!
பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கினாலும் அரசு பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பள்ளிகள் அனைத்தும் அரசு அறிவுறுத்திய நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றியது.
பள்ளியில் கொரோனா:
இந்நிலையில் பழனி அரசு மகளிர் பள்ளியில் உள்ள 10ம் வகுப்பு ஆசிரியருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால் அங்கு படித்த 61 மாணவிகள் மற்றும் 64 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், நான்கு ஆசிரியருக்கும், ஒரு மாணவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நோய் தொற்று அறிகுறிகள் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே இப்பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்து தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
[table id=1078 /