தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்க நவம்பர் 10 கடைசி நாள்!
மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆனது கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி ஸ்வாமி கோயிலில் இருந்து வெளியானது. இந்த பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மருந்தாளுநர் பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட, சித்த மருத்துவத்தில் மருந்தியல் பிரிவில் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Pharmacist பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
CSB வங்கியில் Manager காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 10-நவம்பர்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.