பாக்கியாவை எதிர்த்து வில்லியாக மாறும் ராதிகா, கவலையில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!
விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சமி சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. தற்போது வெளியாகி வரும் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் சுயரூபம் குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டது. அவர் ராதிகாவுடன் தொடர்பில் இருந்தை தெரிந்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினார். அதோடு கோபியை டைவர்ஸ் செய்யவும் முடிவெடுத்து இருவரும் கோர்ட்டுக்கு சென்று சட்டபடி டைவர்ஸும் செய்து விட்டனர். இதற்கு மேல் நீ இந்த வீட்டில் இருக்க கூடாது என்று கோபி பாக்கியாவை நிரந்தரமாக வீட்டை விட்டு போக சொன்னார். ஆனால் தற்போது கதையின் ட்விஸ்ட்டாக கோபி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
ஆரம்பத்தில் ராதிகாவும், கோபியும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் திடீரென கோபி பாக்கியாவின் கணவர் என்றும் தெரிந்ததும் ராதிகா எனக்கு கோபியுடன் திருமணம் வேண்டாம் என்றார். தற்போது கோபி ஒரேயடியாக பாக்கியாவை டைவர்ஸ் செய்து ராதிகாவுடன் சேர்வதற்கு தயாராக உள்ளார். இதனால் நேரடியாக ராதிகாவிடம் வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். ஆனாலும் ராதிகா அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இப்போது கோபி, ராதிகா வீட்டில் இருப்பதாக அவரது குடும்பம் நினைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் கோபியின் அம்மா ஈஸ்வரி ராதிகா வீட்டுக்கு வந்து கண்டபடி திட்டி விடுகிறார்.
கோபி & பாக்கியா பிரச்சனையால் சண்டியிட்டு கொள்ளும் எழில், செழியன் – எதிர்பாராத திருப்பம்!
Exams Daily Mobile App Download
ஏற்கனவே பாக்கியாவும் ராதிகாவிடம் சண்டை போட்டுள்ளார். ஆனால் ராதிகா ஒரு குற்ற உணர்ச்சியுடன் இருப்பதால் அமைதியாகவே சென்று விட்டார். தற்போது மாற்றி மாற்றி ராதிகாவை குறை சொல்லி வருவதால் ஒரு வேளை ராதிகா இந்த சீரியலில் வில்லியாக வர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. நேற்று வெளியான ப்ரோமோவில் கூட ராதிகா கோபியின் அம்மா ஈஸ்வரியிடம் கடுமையாக பேசுகிறார். இத்தனை நாள் அமைதியாக இருந்த ராதிகா திடீர்னு ஆத்திரம் அடைவதால், இனி பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் கேரக்டர் நெகட்டிவ்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
எப்படியோ கோபி, பன்னி மூஞ்சி பாக்யாவை விட்டு ஒரேயடியாக விலகி ராதிகாவுடன் சேர்ந்தால் நல்லது. பாக்யா வேண்டுமானால் ராஜேஷை திருமணம் செய்து கொண்டு சுகமாக வாழட்டுமே…