கோபி & பாக்கியா பிரச்சனையால் சண்டியிட்டு கொள்ளும் எழில், செழியன் – எதிர்பாராத திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா கோபி விவாகரத்து வாங்கியது ஜெனி அம்மாவிற்கு தெரிய வருகிறது. அதனால் ஏற்கனவே கோவமாக இருந்த செழியன் மீண்டும் கோபப்படுகிறார். அதனால் எழில் செழியன் இடையே சண்டை வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவின் திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முதலில் விவாகரத்து வாங்க நினைத்தது கோபியாக இருந்தாலும் இறுதியில் குடும்பத்தினர் பேச்சை மீறி பாக்கியா விவாகரத்து வாங்கியதால் இனியா, செழியன், ஈஸ்வரி என அனைவரும் கோவமாக இருக்கின்றனர். இதற்கிடையே பாக்கியா மற்றும் கோபியின் விவாகரத்து பற்றி ஜெனி அம்மாவிற்கு தெரிய வருகிறது. அவர் வீட்டிற்கு வந்து இது பற்றி கேட்க ஜெனி கேட்கவிடாமல் தடுக்கிறார்.
இந்நிலையில் கோபி வீட்டை விட்டு போனதற்கு பாக்கியா தான் காரணம் என நினைத்து கொண்டிருக்கும் செழியன் தற்போது ஜெனி அம்மாவிற்கு இது பற்றி தெரிந்ததால் பயங்கர கோவமாக இருக்கிறார். அதனால் அவர் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார். சம்மந்தம் செய்த வீட்டில் இருந்து வந்து என் மீது குறை சொன்னால் கூட நான் ஏற்றுக் கொள்வேன் ஆனால் இப்படி ஒரு சங்கடமாக நிலைமைக்கு நீ தான் காரணம் என செழியன் கோவமாக பேசுகிறார்.
கோபியால் பாக்கியாவை வெறுக்கும் குடும்பத்தினர், நொந்து போன பாக்கியா – வெளியான ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
அப்போது எழில் அங்கே வந்து செழியன் பேசுவதை பார்த்து கோபப்படுகிறார். பாக்கியா என்ன செய்தாலும் எழில் தான் ஆதரவாக இருக்கும் நிலையில், செழியன் பாக்கியாவை பேசுவதை எல்லாம் பார்த்து எழிலிற்கு பயங்கர கோவம் வந்து செழியனுடன் சண்டை போடுகிறார். பாக்கியாவும் ஜெனியும் தடுக்க ஆனால் இவர்களின் சண்டை அதிகமாகிறது. அதனால் குடும்பத்தில் மீண்டும் பெரிய பிரச்சனை வர இருக்கிறது. இனி பாக்கியா என்ன முடிவு செய்வார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்