திருமணத்தை நிறுத்த துணிந்த பாக்கியா.. காலில் விழுந்து கதறும் கோபி – பாக்கியலட்சுமி அசத்தல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவும் கோபியும் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், அவர்களின் திருமணம் என தெரியாமல் சமையல் ஆர்டர் பாக்கியாவிற்கு கிடைக்கிறது. இந்நிலையில் கோபியின் திருமணம் பற்றிய உண்மை பாக்கியாவிற்கு தெரிய வர, கல்யாணத்தை நிறுத்த வேண்டாம் என கோபி பாக்கியாவிடம் கெஞ்ச போகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல், பல திருப்பங்களுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கோபி தன்னுடைய குடும்பத்தை விட்டு ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். ஆனால் அவருடைய திருமணம் பற்றி ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்திக்கு மட்டும் தான் உண்மை தெரியும். அதனால் அவர்கள் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என நினைத்து கோபியிடம் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு சொல்லியும் கோபி கேட்பதாக இல்லை.
மறுபக்கம் சந்துரு தனது தங்கையின் திருமண ஏற்பாடுகளை பிரமாண்டமாக கவனிக்கிறார். மேலும் பாக்கியா, குடும்பத்தின் பணக் கஷ்டத்தை போக்க வேண்டும் என்பதால் பெரிய சமையல் ஆர்டர் வாங்கி இருக்கிறார். ஆனால் அது கோபி ராதிகாவின் திருமண விழா என்ற உண்மை பாக்கியாவிற்கு பிறகு தான் தெரிய வருகிறது. பாக்கியா இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ஜெனியிடம் பேசுவதை கோபி கேட்டு விடுகிறார்.
நடிகை VJ சித்ரா கொலையில் திடீர் திருப்பம் – தப்பித்த கணவர் ஹேமந்த்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
உடனே பதட்டமடைந்த கோபி பாக்கியாவை தனியாக சந்தித்து பேசுகிறார். ராதிகா என்னை நம்பி தான் இருக்கிறாள். எப்படியாவது இந்த திருமணம் நடக்க வேண்டும். தயவுசெய்து திருமணத்தை நிறுத்த வேண்டும் என நினைக்காதே என சொல்ல, பாக்கியா கோபியின் நிலைமையை நினைத்து கோவப்படுவதா அல்லது பரிதாபப்படுவதா என தெரியாமல் இருக்கிறார். இதெல்லாம் அடுத்த வார எபிசோடில் காட்டப்பட இருக்கிறது. எனவே இனி வரும் எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலில் பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்