கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் புதிய அப்டேட் ஒன்று வைரலாகி வருகிறது. இது குறித்து முழு விவரத்தை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
புது ட்விஸ்ட்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது தான் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த சீரியலான, பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கணவரான கோபிக்கு, கடந்த பல காலமாகவே ராதிகா மீது காதல் ஏற்பட்டுள்ளது. பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிகளிலும் கோபி ஈடுபட்டு வந்தார். இதற்காக பல பொய்களை கோபி ராதிகாவிடமும் பாக்கியாவிடமும் சொல்லி வந்தார்.
TN Job “FB Group” Join Now
இருப்பினும் தற்போது கோபியின் திருட்டுதனங்கள் எல்லாம் தண்டவாளம் ஏறி விட்டது. ஒரு போதும் தான் டீச்சருக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று ராதிகா குற்ற உணர்ச்சியில் உள்ளார். இதற்கிடையில் ராதிகாவின் அம்மா கோபிக்கு தான் சப்போர்ட் செய்து வருகிறார். அவர் உனக்காக தான் பொய் சொல்லுகிறார். அதனால் அவரை கல்யாணம் பண்ற வழிய பாரு என்று சொல்கிறார். இந்நிலையில் மயூவை பார்க்க கோபி ஸ்கூலுக்கு சென்று உள்ளார். இதையடுத்து ராதிகா, மயூவை இனி நீ கோபி அங்கிள் கிட்ட பேசக்கூடாது என சொல்கிறார். ஆனால் மயூ கேட்பதாக இல்லை, என்னால முடியாதும்மா, எனக்கு கோபி அங்கிளை ரொம்ப பிடிக்கும். அதனால நான் பேசாம இருக்க மாட்டேன் என சொல்லி மேலே போய் விடுகிறார்.
தமிழக பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – விடுப்பு கோர கல்வித்துறையின் புதிய அம்சம்!
அதன் பிறகு ராதிகா வீட்டுக்கு வந்த கோபி, ராதிகாவின் அம்மாவை பார்த்து பேசுகிறார். அப்போது அவரது அம்மா கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க ராதிகா சரியாயிடுவா? என சொல்கிறார். இதற்கிடையில் ராஜேஷ், கோபியை வெறுப்பேற்றுகிறார். இதனால் கோபி சரமாரியாக ராஜேஷை அடிக்கிறார். இதையடுத்து ராஜேஷ் ராதிகாவிடம், நான் கெட்டவனுதான கோபி பின்னால போன, இப்போ அவனும் நல்லவன் இல்ல அடுத்து யார் பின்னால போக போற என்று கேவலமாக பேசுகிறார். இதைக்கேட்டு ராதிகா கூனி குறுகி விட்டார். இப்படி இருக்கையில், அடுத்து ராதிகா எடுக்கப் போகும் முடிவு என்ன? என்பது குறித்து தான் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.