விபத்தில் சிக்கிக் கொண்ட ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனி – அவரே வெளியிட்ட பதிவு! ரசிகர்கள் ஷாக்!
பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் தற்போது அவருக்கு நிகழ்ந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் அந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாக்கியலட்சுமி ஜெனி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாக்கியாவிற்கு எப்போதுதான் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரியப் போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பாக்கியாவிடம் மாட்டுவது போல வந்து கோபி தப்பித்துக்கொண்டே தான் இருக்கிறார்.
பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாக்கியாவின் கண்ணுக்கு முன்னாடி கோபி தவறு செய்தும் கூட கோபியை பாக்கியா நம்பி கொண்டிருக்கிறார். ஒரு பெண் இவ்வளவு அப்பாவியாக இருக்க கூடாது என ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலின் மூலமாகவே பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா மற்றும் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்கள் உருவாகியுள்ளன. மேலும், பாக்கியலட்சுமி தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் திவ்யா கணேஷ். இவர் பாக்கியாவிற்கு மூத்த மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாக்கியலட்சுமி தொடரில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைப்பக்கங்களில் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்விக்கு பதில் கூறும்படியான ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு நடந்த விபத்து பற்றி கூறுங்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு திவ்யா கணேஷ், இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நடந்தது. கடவுள் புண்ணியத்தால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.