முல்லையின் வளைகாப்புக்காக வரும் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் – விரைவில் மகாசங்கமம்!
முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா என்று எதிர்பார்த்த சமயத்தில் முல்லை கர்ப்பமாக இருப்பது போன்றும், குடும்பத்தினர்கள் வளைகாப்பு நடத்துவது போன்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தினரும் வளைகாப்பில் கலந்து கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது. செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை மூலமாக வேண்டுமானால் கருவுற செய்யலாம் என மருத்துவர் கூறுகிறார்.
Exams Daily Mobile App Download
ஆனால், செயற்கை முறை சிகிச்சைக்கு குறைந்தது 5 லட்சம் வரை செலவாகும் எனவும் கூறுகிறார். பின்பு மூர்த்தியும் ஜீவாவும் எப்படியோ கஷ்டப்பட்டு 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள். ஆனால், இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்பதை சொல்ல முடியாது. ஒருவேளை செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியடைந்து விட்டால் மீண்டும் ஐந்து லட்சம் கட்டி முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும்.
இதனால் குடும்பத்தினர் அனைவரும் கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்தில் இருந்து முல்லைக்கு செயற்கைமுறை சிகிச்சை தொடங்க இருக்கிறது. கதிரும் முல்லையும் என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தில் உள்ளனர். இந்நிலையில் முல்லை கர்ப்பமாவது போன்றும், முல்லைக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்துவது போன்றும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரும் இந்த குடும்பத்துடன் இணைந்து முல்லைக்கு வளைகாப்பு நடத்துவது போன்றும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.