பார்வதியின் திருமணத்தை நடத்தி வைக்க வரும் பாக்கியா, கண்ணம்மா & அபி – ப்ரோமோ ரிலீஸ்!

0
பார்வதியின் திருமணத்தை நடத்தி வைக்க வரும் பாக்கியா, கண்ணம்மா & அபி - ப்ரோமோ ரிலீஸ்!
பார்வதியின் திருமணத்தை நடத்தி வைக்க வரும் பாக்கியா, கண்ணம்மா & அபி - ப்ரோமோ ரிலீஸ்!
பார்வதியின் திருமணத்தை நடத்தி வைக்க வரும் பாக்கியா, கண்ணம்மா & அபி – ப்ரோமோ ரிலீஸ்!

பார்வதியின் திருமணம் நடைபெறுமா அல்லது விக்கி திருமணத்தை நிறுத்திவிடுவாரா என ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில் பார்வதியின் திருமணத்தை நடத்தி வைக்க பாக்கியா, கண்ணம்மா மற்றும் அபி மூவரும் வரும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பார்வதியின் திருமணம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் அனைத்துமே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகளை படம் போட்டுக் காட்டுவதால் மக்கள் அனைவரும் இந்த தொலைக்காட்சி சீரியல்களை அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். தற்போதெல்லாம் பெண்கள் அனைத்து இடங்களுக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆண் பிள்ளைகளுக்கு சமமாக பெண் பிள்ளைகளையும் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப பெற்றோர்களும் தயாராக இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஆனால் சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்கள், வன்முறைத் தாக்குதல் முதலான கொடுமைகளிலிருந்து பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது குடும்பத்தில் இரண்டாவது மருமகளாக இருக்கும் அர்ச்சனா அந்த வீட்டிற்கு துரோகம் செய்ய நினைக்கிறார். அதாவது தனது கணவரின் தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமைந்து விடக்கூடாது எனவும், இந்த மாப்பிள்ளைக்கு தனது தங்கையை திருமணம் செய்து வைக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்.

பாக்கியாவின் வீட்டிற்கு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் – ராதிகாவிடம் பேச முடியாமல் தவிக்கும் கோபி!

அர்ச்சனா போடும் அனைத்து திட்டங்களுக்கும் சந்தியா தான் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். அதாவது அர்ச்சனா செய்யும் அனைத்து தவறுகளையும் கண்டுபிடித்து குடும்பத்திற்காக சந்தியா ஒவ்வொரு விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறார். தற்போது கூட பார்வதியின் திருமணம் எந்த தடங்கலும் இல்லாமல் நடத்திவிட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறார். விக்கி, பார்வதியின் திருமணத்தை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். அதாவது இவர்கள் இருவரும் காதலித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனைவரிடமும் காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டுகிறார். சந்தியா தான் எந்த தடங்கலும் ஏற்படாமல் தடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது சந்தியாவோடு பாக்கியா, கண்ணம்மா மற்றும் அபி ஆகிய மூவரும் இணைந்து திருமணத்தை நடத்துவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!