கோபிக்காக ராதிகாவிடம் கெஞ்சும் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது ராதிகாவிற்கு தெரிய வருகிறது. தற்போது பாக்கியா ராதிகாவின் வீட்டிற்கு வந்து எனது கணவரை விட்டுவிடு என ராதிகாவிடம் கெஞ்சுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரிய வந்து விடுகிறது. இதற்கு பிறகாவது ராதிகா கோபியை விட்டு விலகுவாரா அல்லது பாக்கியாவை காட்டிலும் கோபி நம்மை தானே அதிகமாக காதலிக்கிறார் என கோபியை திருமணம் செய்துகொள்ள நினைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது மூர்த்தி கோபியை பற்றி கூறியதிலிருந்து கோபி மீது ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது.
Exams Daily Mobile App Download
கோபி எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் உங்களது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என ராதிகா கேட்கிறார். எப்படியாவது ராதிகாவிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என கோபி திட்டம் போட்டார். ஆனாலும், என்னை உங்கள் வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் என ராதிகா கேட்டபடியே இருந்ததால் கண்டவாறு குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பாக்கியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார்.
கண்ணம்மாவிற்கு வில்லனாக வரும் ரோஹித் – புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்!
பாக்கியா டீச்சர் தான் எனது மனைவி என ராதிகாவிடம் கூறுகிறார். கோபியும் நம்மை ஏமாற்றி விட்டாரே என ராதிகா கதறி அழுகிறார். பின்பு போதையில் தள்ளாடியபடியே பாக்கியாவின் வீட்டிற்கும் சென்று ராதிகாவிடம் பேசுவதுபோல் பாக்கியாவிடமும் அனைத்து உண்மையையும் உளறிக் கொட்டுகிறார். பிறகு உடனே பாக்கியா கிளம்பி ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். ராதிகாவிடம் எனது கணவரை தயவு செய்து விட்டு விடு என ராதிகாவிடம் கெஞ்சுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்குப் பிறகாவது ராதிகா கோபியை விட்டுவிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.