கோபியை வீட்டை விட்டு துரத்தும் பாக்கியா, ஆதரவளிக்கும் குடும்பம்? சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்துள்ள நிலையில், இதைவிட அதிரடியாக அடுத்த கட்ட கதைக்களம் செல்ல உள்ளது. இவை குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் இருந்து மிகவும் அமைதியாக குடும்பத்திற்காக மட்டுமே யோசித்து வந்த பாக்கியா கதாபாத்திரம், தனது கணவரின் உண்மையான முகத்தை அறிந்த பிறகு இப்பொழுது முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. இதை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றப்போலவே, தற்பொழுது பாக்கியா மிகவும் துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகிறார். பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பெற கோர்ட்டிற்கு அழைத்து சென்ற கோபி, பாக்கியாவின் அதிரடிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்.
தமிழக இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 1,38,500 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
தனது கணவர் கோபியை பற்றி யார் என்ன கூறினாலும், அதை நம்பாத பாக்கியா தனது கண்ணாலேயே உண்மை அனைத்தையும் பார்க்கும் படி ஆகிவிட்டது. அதன்பிறகு, தான் பாக்கியா கோபியின் சுயரூபத்தை நம்புகிறார். அதேநேரத்தில், கோர்ட்டில் இருந்து விவாகரத்து வழக்கிற்காக ஆஜராகும் படி கடிதம் வர, பாக்கியா தானாகவே சென்று விவாகரத்து தர சம்மதம் என்று சொல்லுகிறார். இதை கோபி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஆடிப்போகிறார்.
பாக்கியாவிற்கு ஆதரவாக பேசி வந்த குடும்பத்தினர் பாக்கியாவின் இந்த செயலால் கோபமடைந்து விடுகின்றனர். இனியா எவ்வளவோ கெஞ்சியும் கூட பாக்கியா செவி சாய்க்கவில்லை. மேலும், மேலும் இனியா அழுவதை பார்த்து கோபி இவ கிடா ஏன் கெஞ்சிகிட்டு இருக்க என்று இனியாவை சமாதானம் செய்கிறார். இதனால் கோபமடைந்த பாக்கியா நீ அம்மா கூட இருக்க ஆசைப்படுறீயா? அல்லது அப்பா கூட இருக்க ஆசைப்படுறீயா இனியா? என்று கேட்கிறார். இனியா அம்மா தான் வேண்டும் என்று சொன்னதும் கோபியை பாக்கியா வீட்டை விட்டு விரட்டுவது போன்று காட்சிகள் வர உள்ளது.