கடைசி நேரத்தில் ராதிகா கால்லை வாரிய கோபி.. நின்று போன திருமணம் – பாக்கியலட்சுமி அதிரடி ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவை கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இனியாவிற்கு அது பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் இனியாவிற்காக கோபி திருமணம் வேண்டாம் என சொல்ல உடனே ராதிகாவின் அம்மாவிற்கு பயங்கர கோவம் வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ராதிகா திருமண ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபக்கம் ராதிகாவின் அம்மாவிற்கு இனியா உடன் கோபி பாசமாக இருப்பது பிடிக்காமல் இருக்கிறது. இனியாவை வைத்து அந்த பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்துவிடுவார் என ராதிகாவின் அம்மா அடிக்கடி எச்சரித்து கொண்டே இருக்கிறார். ஆனால் ராதிகா கோபி மீது இருந்த நம்பிக்கையால் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியாவை கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
ஆனால் இனியாவிற்கு ராதிகா வீட்டிற்கு வந்தது பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் இனியாவிற்கு கோபி ராதிகாவின் திருமணம் பற்றி தெரிய வருகிறது. அதனால் வருத்தப்பட்ட இனியா கோபியிடம் இந்த திருமணம் வேண்டாம் என சொல்ல, இனியா அழுவதை பார்த்து கோபியின் மனம் மாறுகிறது. அதனால் கோபி ராதிகாவிடம் திருமண ஏற்பாடுகளை நிறுத்த சொல்கிறார். அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
Exams Daily Mobile App Download
ராதிகாவின் அம்மா சொல்வது போல இனியாவால் கோபி மனது மாறிவிட்டது என்பதை நினைத்து ராதிகா மிகவும் வருத்தப்படுகிறார். இதை கேட்ட ராதிகாவின் அம்மா திருமண ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் இந்த நேரத்தில் இப்படி சொன்னால் என் மகளின் வாழ்க்கை என்னவாகும் என கேட்கிறார். கோபியால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. காதலி முக்கியமா மகள் முக்கியமா என்ற இக்கட்டான நிலையில் கோபி இப்போது சிக்கி கொண்டார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்