கோபி கட்டிய தாலியை கழட்டி எறிந்த பாக்கியா.. அதிர்ச்சியில் மொத்த குடும்பம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், குடும்பத்தினர் தடுத்து கூட கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். இந்நிலையில் பாக்கியா கழுத்தில் இன்னும் கோபி கட்டிய தாலி இருக்க, இனி வரும் எபிசோடில் கோபி முகத்தில் பாக்கியா அதை கழட்டி வீச இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடியாக பல திருப்பங்கள் நடந்து முடிந்துள்ளது. திருமண மேடையில் கோபி ராதிகா மணமக்கள் கோலத்தில் இருக்க, திருமணத்தை நிறுத்த ஈஸ்வரி இனியாவுடன் வருகிறார். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பாகவே கோபி ராதிகா கழுத்தில் தாலி கட்டிவிட, ஈஸ்வரி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இனிமேல் நீ எனக்கு மகனில்லை என ஈஸ்வரி சொல்ல, டாடி என்னை ஏமாற்றிவிட்டார் என இனியாவும் சொல்கிறார்.
ஈஸ்வரி கோபியையும், ராதிகாவையும் கண்டபடி பேசிவிட, இனிமேல் என் மருமகள் பாக்கியாவிற்கும், என் பேரக்குழந்தைகளுக்கும் நான் இருக்கேன் என சொல்லி பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி பேசியதை கேட்டு ராதிகா கோவமாக இருக்க, கோபி அவரை சமாதானம் செய்கிறார். இந்நிலையில் கோபி ராதிகா திருமணம் முடிந்துவிட்டதால், பாக்கியாவின் 25 வருட திருமண வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.
பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்தது – கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு விஜய் டிவி கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்!
Exams Daily Mobile App Download
இனி பாக்கியா கழுத்தில் இருக்கும் தாலிக்கு அர்த்தமில்லை என்பதால், பாக்கியா கோபியை சந்தித்து தாலியை கழட்டி கொடுக்கிறார். பாக்கியா இப்படி செய்வார் என எதிர்பார்க்காத கோபி, அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அடுத்து வரும் எபிசோடில் தனி ஒரு பெண்ணாக இருந்து குடும்பத்தை பாக்கியா எப்படி பார்த்துக் கொள்ள போகிறார் என்பதே கதையாக இருக்க போகிறது. அதனால் பாக்கியலட்சுமி சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்