கோபியை எதிர்த்து புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியா – ஆச்சரியத்தில் குடும்பத்தினர்!
குடும்பத்தலைவியின் எந்த ஒரு முயற்சிக்கும் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாத பட்சத்தில் அவர்களது உழைப்பிற்கான அங்கீகாரமாவது கிடைக்க வேண்டும் என்று தான் பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் சொந்த முயற்சியால் பாக்கியாவின் நிலை மொத்தமாக மாறி உள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
முழுக்க முழுக்க தனது கணவரை மட்டுமே நம்பிக் கொண்டு, அவர் சொல்வது தான் வாக்கு, அது மட்டும் தான் வாழ்கை என்று ஒரு சிறிய கூட்டுக்குள் இருந்து வந்த பாக்கியா, ஒரு கட்டத்தில் தனது நீண்ட நாள் ஆசையான சமையல் கேட்டரிங் தொழிலை முதலில் சிறிய அளவில் தொடங்குகிறார். அதற்கு குடும்பத்தில் இருந்து கிடைக்க வேண்டிய ஆதரவிற்கு பதிலாக எதிர்ப்புகளும், குறைந்த மதிப்பிடலும் தான் கிடைத்தது. இதனால் துவண்டு போகாத பாக்கியா தொடர்ந்து தனது கடமையை சிறப்பாக செய்து வந்தார்.
பாக்கியாவை ஆரம்பத்தில் இருந்து பிடிக்காத கணவர் கோபி, தனது பால்ய வயது காதலி ராதிகாவை சந்தித்ததும் பாக்கியாவை பார்க்க கூட அவருக்கு பிடிக்கவில்லை. பாக்கியா எதை செய்தாலும் அதில் குற்றம் மற்றும் குறைகளை கண்டுபிடிக்க தொடங்கினார். ஆனாலும், பாக்கியா இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பாக்கியாவிற்கு, கோபி தன்னை ஏமாற்றி வருவது தெரிய வருகிறது. தனக்கு தெரியாமலேயே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பிறகு, கோபி அதை நியாப்படுத்தியும் பேசுகிறார்.
கோபி & ராதிகா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்மா, நிம்மதியில் பாக்கியா – புதிய ட்விஸ்ட்!
Exams Daily Mobile App Download
இத்தனை வருடங்களாக அனைத்தையும் பொறுத்து கொண்ட பாக்கியா, தன்னை பிடிக்காத ஒருவருடன் இனி வாழப் போவதில்லை என்று சொல்லி, நீதிமன்றத்தில் விவகாரத்தை பெற்று கோபியையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார். இதன் பின்னர் தான் பாக்கியா முழு முயற்சியுடன் தொழிலில் இறங்குகிறார். அதன்மூலம் பல ஆர்டர்களை பெற்று, சிறப்பாக முன்னேறுகிறார். பாக்கியாவின் இந்த மாற்றத்தை கண்டு குடும்பத்தினர் அனைவரும் ஆச்சர்யமடைகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்