தாலியை கழற்றி வீசும் பாக்கியா, அதிர்ச்சியில் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ அதிரடி திருப்பங்கள்!

0
தாலியை கழற்றி வீசும் பாக்கியா, அதிர்ச்சியில் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' அதிரடி திருப்பங்கள்!
தாலியை கழற்றி வீசும் பாக்கியா, அதிர்ச்சியில் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' அதிரடி திருப்பங்கள்!தாலியை கழற்றி வீசும் பாக்கியா, அதிர்ச்சியில் ஈஸ்வரி - 'பாக்கியலட்சுமி' அதிரடி திருப்பங்கள்!
தாலியை கழற்றி வீசும் பாக்கியா, அதிர்ச்சியில் ஈஸ்வரி – ‘பாக்கியலட்சுமி’ அதிரடி திருப்பங்கள்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை வேண்டாம் என்று முடிவு செய்து பாக்கியா வீட்டை விட்டு போனதை இன்னும் ஒருவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில், இப்போது அவர் கோபி கட்டிய தாலியை கழற்றி வீசுவது போல அடுத்தகட்ட கதைக்களம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

சமீப காலமாக பரபரப்புக்கும், ஸ்வாரசியத்திற்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’. விஜய் டிவியில் சுமார் 550 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக வெளியாகி வரும் இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இப்போது ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில் இதுவரை கோபியை உத்தம புருஷன் என்று நம்பிக்கொண்டிருந்த பாக்கியா அவரை பற்றிய உண்மைகளை அறிந்ததும் கொதித்தெழுந்து விடுகிறார். அதுவரைக்கும் அமைதியே உருவாக இருந்த பாக்கியா தனக்கு நடந்த அநீதிக்காக கோபியை நிற்க வைத்து கேள்வி கேட்கிறார்.

Exams Daily Mobile App Download

இது மட்டும் இல்லாமல் கோபியை வேண்டாம் என்று முடிவு செய்யும் அவர் அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்போது பாக்கியாவின் இந்த முடிவை எதிர்பார்க்காத குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். மறுபக்கத்தில், கோபி தவறு செய்திருந்தாலும் பாக்கியா அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஈஸ்வரி பேசிக்கொண்டிருக்கிறார். அதே போல இனியாவும் பாக்கியாவை மிஸ் செய்கிறார். ஆனால், தான் எடுத்த முடிவில் இருந்து விலகாத பாக்கியா ஒருபோதும் அந்த வீட்டுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக கூறுகிறார்.

வீட்டில் இருந்தபடியே பார்க்கும் வேலைக்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு – முக்கிய அறிவிப்பு!

இப்போது, பாக்கியா எடுத்த இந்த முடிவு சரியானதாக இருந்தாலும் அவருக்கு உறுதுணையாக வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் நிற்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதே போல இனியா முதல் ஈஸ்வரி வரை வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியா இல்லாததால் அவர்களுக்கு காபி போட்டு கொடுக்க ஆள் இல்லை, வீட்டு வேலை செய்ய ஆள் இல்லை என்று வருத்தப்படுகிறார்களே தவிர கோபி நடந்து கொண்ட விஷயம் அவருக்கு எப்படி வலிக்கும் என்பது குறித்து சிந்திக்கவில்லை. இதனால், எல்லாவிதமான சம்பிரதாயங்களையும் மீறி கோபி வேண்டாம் என்று முடிவு செய்து பாக்கியா தனது தாலியை கழற்றி வீசுவது போல அடுத்தகட்ட கதைக்களம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!