கோபி & ராதிகாவை சேர்த்து வைக்கும் பாக்கியா, மறுக்கும் இனியா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
கோபிக்கும் ராதிகாவிற்கும் தொடர்பு இருப்பது அறிந்து பாக்கியா ராதிகாவை சென்று சந்திக்கிறார். இந்நிலையில், ராதிகாவுடன் கோபியை சேர்த்து வைக்க பாக்கியா முழு மனதுடன் ஒப்புக்கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கும் ராதிகாவிற்கு தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த உண்மை பாக்கியாவிற்கு தெரிய வந்ததுமே இதற்கு பிறகு கோபி ராதிகாவுடன் சந்தோசமாக வாழட்டும் என முடிவு செய்து வீட்டை விட்டே வெளியே செல்கிறார். ஆனால், பாக்கியா கோவத்தில் தான் இந்த முடிவெடுத்திருக்கிறார். கண்டிப்பாக இரண்டு, மூன்று நாட்களில் பாக்கியா திரும்பி வந்துவிடுவார் என குடும்பத்தினர்கள் நினைத்தார்கள்.
Exams Daily Mobile App Download
ஆனால், இதற்கு பிறகும் பிடிக்காத மனைவியாக அந்த வீட்டிற்கு செல்ல கூடாது என்பதில் பாக்கியா தெளிவாக இருக்கிறார். இனியா, ஜெனி, செழியன் என அனைவரும் பாக்கியாவிடம் கெஞ்சியும் கூட பாக்கியா மறுபடியும் அந்த வீட்டிற்கு வர ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், இனியா பாக்கியா மீது மிகவும் கோவப்படுகிறார். ஆரம்பத்தில், பாக்கியாவும் கோபியும் பிரிந்தால் கோபியுடன் தான் செல்வேன் என கூறிய இனியா தற்போது பாக்கியா இல்லாத போது தான் பாக்கியாவின் அருமையை உணருகிறார்.
இதற்கு பிறகு ராதிகாவை பார்க்க பாக்கியாவும் செல்வியும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு ராதிகாவிடம் கடைசியில் நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டிர்கள். கோபி எனக்கு செய்தது துரோகம் என்றால் நீங்கள் எனக்கு செய்தது அதற்கும் மேல் என பாக்கியா கூறுகிறார். உடனே, ராதிகா நான் தெரிந்தே எந்த தவறையும் செய்யவில்லை. நீங்கள் தான் கோபியின் மனைவி என்கிற உண்மை எனக்கு தெரியாது என கூறி பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இதற்கு பிறகு ராதிகாவுடன் கோபியை சேர்த்துவைத்துவிடலாம் என பாக்கியா முடிவெடுக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.